Saturday, 20 May 2017

மாத இதழுக்கான குறிப்புகள்

ஷஹீத் இமாம் ஹஸனுல் பன்னா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அண்ணவர்களின் 10 அறிவுரைகள்....

1. எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.

2. அல்குர்ஆனை ஓதுங்கள்;
அல்லது அதனைச் செவிமடுங்கள்;
அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக் கழித்துவிடாதீர்கள்.

3. அரபி மொழியைக் கற்பதற்கும் பேசுவதற்கும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது இஸ்லாத்தின் மூலாதார நூல்களின் மொழியாகும்.

4. எந்தவொரு விஷயத்திலும் தர்க்கம்புரியாதீர்கள். ஏனெனில், தர்க்கம் புரிவதால் எந்த நன்மையும்
விளையாது.

5. அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வுடன் தொடர்புள்ள மனிதன் எப்போதும்
அமைதியாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொள்வான்.

6. யாரையும் பரிகாசம் செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியை இலக்காகக் கொண்ட சமூகம், எதையும் இலக்கோடுதான் பார்க்கும்.

7. தேவையைவிட அதிகமாகக் குரலெழுப்பாதீர்கள். அது பிறருக்கு விகாரமாகவும்
தொல்லையாகவுமே இருக்கும்.

8. தனிமனிதர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் அமைப்புகளைக் குறை கூறுவதையும்
தவிர்த்துக்கொள்ளுங்கள். நல்லவற்றைத் தவிர வேறெதையும் பேசாதீர்கள்.

9. நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சகோதரருடனும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்கள் அதனை உங்களிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. ஏனெனில், நமது அழைப்புப் பணியின் அடிப்படையே பரஸ்பர அறிமுகம்தான்.

10. நேரத்தைவிட கடமைகள் அதிகம். பிறர் தமது நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவுங்கள். பிறரிடம் உங்களுக்கு ஏதாவது தேவையிருந்தால் அதைச் சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள்.

🍀ஷைக் தன்தாவி அவர்களின் அற்புதமான வரிகள்.

எம்மை அறியாதவர்களின் பார்வையில் நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்.

எம் மீது பொறாமை கொண்டவர்களின் பார்வையில் நாமெல்லாம் ஏமாற்றப்பட்டவர்கள்.

எம்மைப் புரிந்தவர்களின் பார்வையில் நாமெல்லாம் நல்லவர்கள்.

எம்மை விரும்புவர்களின் பார்வையில் நாமெல்லாம்  கண்ணியமானவர்கள்.

எம்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில் நாமெல்லாம் கெட்டவர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை.

எல்லோரிடமும் உன்னைப்பற்றிய நல்லலெண்ணத்தை ஏற்படுத்தும் கடினமான முயற்சியில் சிரமம் எடுக்காதே!

அல்லாஹ் உன்னைப் பொருந்திக் கொண்டால்,அது போதும் உனக்கு.

மனிதர்களின் திருப்தி அடைய முடியாதது.
அல்லாஹ்வின் திருப்தி விட்டு விடக் கூடாதது.

அடைய முடியாததை விட்டு விடு.
விடக்கூடாததை அடைந்து கொள்.

👍 பொன்னான
       வார்த்தைகள்.

வாழ்வில் 🌧👪🏡 🍛🍞🍲இன்றி கவலைப்படுவோருக்கு.....

இமாம் ஹஸனுல் பஸரீ ரஹிமஹுல்லா அவர்களிடம் ஒருவர் வந்து
"நீண்ட நாட்களாக எங்களுக்கு மழை(🌧🌧🌧) பெய்யவில்லை"
என முறையிட்டார்.
அதற்கு இமாமவர்கள்:
"அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்"
எனக் கூறினார்.
பின்னர் இன்னொரு நபர் வந்து
"தனது மனைவிக்கு குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை"(👪👪👪) எனக் கூறினார்.
அதற்கு இமாமவர்கள்:
"அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்" எனக் கூறினார்.
பின்னர் மூன்றாவதாக இன்னொரு நபர் வந்து
"தனது வருமையைப்" பற்றி (🏡🍲🍞🍛) இமாமிடம் கூறினார்.
அதற்கும் இமாமவர்கள்:
"அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள்"
எனக் கூறினார்.
இமாமவர்களுக்கு பக்கத்திலிருந்த ஒருவர் இமாமவர்களைப்  பார்த்து
"இமாமவர்களே! உங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  தனது பிரச்சினைகளை உங்களிடம் கூறிய மூன்று பேருக்கும் நீங்கள்
"அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருங்கள் "
என்று தானே கூறினீர்கள் எனக் கேட்ட போது,
இமாமவர்கள்:
நீ அல்லாஹ் கூறுவதைக் கவனிக்கவில்லையா? எனக் கூறி கீழ் வரும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

*"நீங்கள் உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்" என்று கூறினேன். (அவ்வாறு நீங்கள் செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்புவான்". செல்வங்களையும், ஆண்மக்களையும் (கொடுப்பது) கொண்டு உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்காக தோட்டங்களையும் ஆக்குவான்;உங்களுக்காக ஆறுகளையும் (அவற்றில்) ஆக்குவான்*  (71:10-12)

மலக்கு களின் துஆவை பெற்றுத்தரும்
8 அமல்கள்:
1- ஒரு தொழுகை முடித்து பேசாமல் அடுத்த தொழுகை வரை காத்திருத்தல்
- முஸ்லிம்
2- முன் ஸஃப்பில் தொழுதல்
- இப்னுஹிப்பான்
3- இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிககும்போது நாம் ஆமீன் கூறினால்
- புகாரி
4- ஃபஜ்ரு தொழுகை முடித்து அதே இடத்தில் அமார்ந்திருத்தல்
- அஹ்மது
5- ஒரு சகோதரனுக்கு அவர் இல்லாத போது துஆ செய்தால்
- முஸ்லிம்
6- தர்மம் செய்யும் போது
- புகாாி
7- நல்லவற்றை பிறருக்கு கற்று கொடுத்தால்
- திர்மிதி
8- உழுவுடன் உறங்க செல்லல்
- இப்னு ஹிப்பான்.

No comments:

Post a Comment