Tuesday, 2 May 2017

இருதய நோய்களை விட்டும் பாதுகாப்புப் பெறுவது எப்படி தொடர் - 2

இருதயத்தின் பாதுகாப்பு பற்றிய நபிமொழி:

عن النُّعْمَان بْن بَشِيرٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ (بخاريباب فَضْلِ مَنِ اسْتَبْرَأَ لِدِينِهِ- كتاب الإيمان

ஹார்ட் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்

இன்றைய சூழ்நிலையில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன. மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. மருத்துவமனைக்கு வருபவர்களில் 70 சதவீதம் பேர் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஹார்ட் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான முக்கிய காரணம் மன அழுத்தம்.  உலகம் முழுவதும் சுமார்  30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 2020 ம் ஆண்டில் உலகை அச்சுறுத்தும் மிகப் பெரிய நோய்களில் ஒன்றாக இது இருக்கலாம்என்றும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது

மன அழுத்தம் என்பது தேவையற்ற கவலைகள், டென்ஷன் ஆகியவற்றால் உருவாகிறது இது எல்லோரையும் பாதிக்கும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண் அதிகம் கவலைப்பட்டால் அது குழந்தையை பாதிக்கும் அதனால் கர்ப்பிணிப் பெண்ணாகிய மர்யம் அலை  தன்னைப் பற்றி அவதூறு சொன்ன நேரத்தில் அதிகம் கவலைப்பட்ட போது அல்லாஹ் ஆறுதல் கூறினான்.

فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا (23) فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا (24) وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا (25) فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (26سورة مريم)

இவ்வாறே மூஸா அலை அவர்களின் தாயார் கவலைப்பட்ட போது அல்லாஹ் ஆறுதல் கூறினான். காரணம்

பால் கொடுக்கும் தாய் கவலைப்பட்டாலும் அந்தத் தாயிடம் பால் அருந்தும் குழந்தையை பாதிக்கலாம் என்பதால்

وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ (7) فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ (8) وَقَالَتِ امْرَأَةُ فِرْعَوْنَ قُرَّةُ عَيْنٍ لِي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ (9القصص

நபிமார்கள் கவலைப்பட்ட போதும் அல்லாஹ் மலக்குகள் மூலம் ஆறுதல் கூற வைத்தான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

பதிவு நாள்: 03-05-2017

No comments:

Post a Comment