*அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்பது அறிவுரைகள்*
*وعن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " أمرني ربي بتسع : خشية الله في السر والعلانية ، وكلمة العدل في الغضب والرضى ، والقصد في الفقر والغنى ، وأن أصل من قطعني ، وأعطي من حرمني ، وأعفو عمن ظلمني ، وأن يكون صمتي فكرا ، ونطقي ذكرا ، ونظري عبرة ، وآمر بالعرف " وقيل : ( بالمعروف )* . رواه رزين .
*ஹள்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:*
*அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:*
*எனக்கு எனது ரப்பு ஒன்பது விஷயங்களைச் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்:*
*1) உள்ரங்கத்திலும், வெளிரங்கத்திலும் (அகத்திலும், புறத்திலும் தனிமையிலும், கூட்டத்திலும்) அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்.*
*2) சந்தோஷத்திலும், கோபத்திலும் நீதத்தையே பேச வேண்டும்.*
*3) வறுமை நிலையிலும், வசதியான நிலையிலும் நடுநிலையை மேற்கொள்ள வேண்டும்.*
*4) என்னுடன் உறவை முறித்தவனுடன் நான் நட்புறவு கொள்ள வேண்டும்.*
*5) எனக்கு எதையும் கொடுக்காதவனுக்கும் நான் கொடுத்து நல்லுபகாரம் புரிய வேண்டும்.*
*6) எனக்கு அநீதி இழைத்தவனை மன்னித்து விட வேண்டும். (பழிவாங்கும் சிந்தனை வரக்கூடாது)*
*7) எனது மெளனம் (மறுமை அல்லது குர்ஆன் ஆயத்தைப் பற்றிய) சிந்தனையாக இருக்க வேண்டும்.*
*எனது பேச்சு அல்லாஹ்வின் திக்ராக (அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கிக் கூறுவதாக) இருக்க வேண்டும்.*
*8) எனது பார்வை (எதைப் பார்த்தாலும்) படிப்பினை (பெறும்) பார்வையாக இருக்க வேண்டும்.*
*9) நான் நற்காரியங்களை ஏவிக்கொண்டிருக்க வேண்டும்.*
(நூல்: ரஜீன், மிஷ்காத்)
-------------------------------------------
No comments:
Post a Comment