நற்குணங்கள் நிறைந்த நல்லடியானாக வேண்டுமா?
நான்கு நபிமொழிகளை பின்பற்றுங்கள்.
---------------------------------------------------------------------அரபி இணைய தளத்திலிருந்து கணியூர் நாஜி
✅الأول : ما رواه الشيخان من حديث أبي هريرة رضي الله عنه أن رسول ﷺ قال :
« من كان يؤمن بالله واليوم الآخر ؛ فليقل خيراً أو ليصمت »
1.யார் அல்லாஹ்வையும் ,மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசவும் .அல்லது மவுனமாக இருக்கவும்.(புகாரி,முஸ்லிம்)
✅والثاني : ما أخرجه الترمذي من حديث علي بن الحسين أن النبي ﷺ قال :
« إن من حسن إسلام المرء تركه ما لا يعنيه
2.ஒரு மனிதனின் அழகிய இஸ்லாத்தில் சேர்ந்தது தனக்கு தேவையில்லாததை விட்டு விடுவது (திர்மதி )
✅والثالث : ما رواه البخاري من حديث أبي هريرة رضي الله عنه أن رجلاً قال للنبي ﷺ : أوصني قال :
« لا تغضب »، فردد مراراً قال : « لا تغضب »
3.ஒரு மனிதர் எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் கேட்டார்,
கோபப்படாதே!என்ற நபி அவர்கள் கோபப்படாதே!என பல முறை சொன்னார்கள்.
✅والرابع : مارواه الشيخان من حديث أنس رضي الله عنه أن النبي ﷺ قال :
« لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه »
4,நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்
✅ففي الأول : ضبط اللسان.
முதல் நபி மொழி :நாவைக்கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கிறது
وفي الثاني : ترك الفضول.
இரண்டாவது நபிமொழி :எந்த செயல் செய்வதால் நமது இம்மைக்கோ மறுமைக்கோ பலனில்லையோ அதை செய்யாமல் விட்டு விடுவதைக் கற்றுக்கொடுக்கிறது
وفي الثالث : ضبط النفس.
மூன்றாவது நபி மொழி
மனத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கிறது
وفي الرابع : سلامة القلب تجاه إخوانه المسلمين
4,நான்காவது நபிமொழி :
சகோதர முஸ்லிம்களின் பால் முஸ்லிமின்
உள்ளதை பரிசுத்தப்படுத்தும்
வழியை கற்றுக்கொடுக்கிறது.
பதிவு நாள்: 02-04-2017
No comments:
Post a Comment