அபிவிருத்தி - பரக்கத்
அல்லாஹ் ஐந்து விஷயங்களைபரக்கத் - அபிவிருத்தி-வளமிக்கது என குர் ஆனில் குறிப்பிட்டுக் கூறுகிறான். அதில் தண்ணீரும் ஒன்று.
1. அல்லாஹ் எனும் திருப்பெயர்
“பெரும் அருள் வளங்கள் நிறைந்ததாக இருக்கின்றது, கீர்த்தியும் கண்ணியமும் மிக்கஉம் இறைவனின் திருப்பெயர்!”
அல் குர் ஆன்:55:78
2. ஸலாம் சொல்லுவது:
“எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும் போது நீங்கள்உங்களைச் சார்ந்தவர்களுக்குஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் நிர்ணயிக்கப்பட்டதும் “அருள் வளங்கள்”கொண்டதும். தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்திதுணர்ந்து செயல்படக் கூடும்!
அல் குர் ஆன்:24:61
3. ஜைத்தூன் மரம்
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். அவனது
ஒளிக்கு உவமை இவ்வாறாகும் “ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது, அவ்விளக்கு கண்ணாடி கூண்டினுள் இருக்கிறது, அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை
போன்றுள்ளது. அவ்விளக்கு, கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத“அருல் வளமிக்க” ஒலிவ ஜைத்தூன் மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது.
அல் குர் ஆன்:24:25
4. தண்ணீர்
மேலும் நாம்வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரினை இறக்கினோம்.
அல் குர் ஆன்:50:9
5. ஹரம் ஷரீஃப்
“நிச்சயமாக, மனிதருக்காக எழுப்பப்பட்ட முதல் வணக்கத் தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்வளம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும்மையமாகவும் அது உள்ளது”
அல் குர் ஆன்:3:96
தண்ணீரை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியுள்ளான் என குர் ஆன் சான்று வழங்குகின்றது.
அல்லாஹ் பத்ரின் வெற்றிக்கு பிண்ணனியில் இருக்கின்ற அல்லாஹ்வின் பேருதவியை எண்ணிப் பார்க்குமாறும், வெற்றியின் மூலம் கிடைத்த கனீமப் பொருட்களும் அல்லாஹ்வின் பேருபகாரம் தான் என்று கூறி நினைத்துப் பார்க்குமாறும் 8:7-10 வரையிலுள்ள வசனத்தில் கூறிவிட்டு பத்ர் வெற்றியின் சூட்சமத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் நினைவுபடுத்துகிறான்.
“இதையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களை சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மனநிம்மதியையும்,அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டுஅகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும் அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது தண்ணீரை பொழியச் செய்தான்”.
அல் குர் ஆன்:8:11
என் இறைவனே! என் சமூகத்தார் என்னை பொய்யென்று தூற்றிவிட்டனர்.இனி எனக்கும் அவர்களுக்கு இடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக!மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!இறுதியில் நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம்.பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை
நீரில்
மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 117-120
“மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம். உமதுகைத்தடியினால் கடல் நீரின்
மீதுஅடியும்! உடனே கடல்
பிளந்து அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகி விட்டது. அதே இடத்திற்கு நாம் ஃபிர் அவ்னின் கூட்டத்தாரையும்நாம் நெருங்கி வரச்செய்தோம்.மூஸாவையும், அவருடன்
இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம். பிறகு ஃபிர்அவ்னின் வகூட்டத்தாரை நாம் கடல்நீரில் மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 62-66
மேற்கூறிய சான்றுகளில் இறைநம்பிக்கையாளர்களுக்குதண்ணீரை அல்லாஹ் அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியிருப்பதை குர் ஆனில் மூலம் சுட்டிக் காட்டுகிறான்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *19-04-2017*
அல்லாஹ் ஐந்து விஷயங்களைபரக்கத் - அபிவிருத்தி-வளமிக்கது என குர் ஆனில் குறிப்பிட்டுக் கூறுகிறான். அதில் தண்ணீரும் ஒன்று.
1. அல்லாஹ் எனும் திருப்பெயர்
“பெரும் அருள் வளங்கள் நிறைந்ததாக இருக்கின்றது, கீர்த்தியும் கண்ணியமும் மிக்கஉம் இறைவனின் திருப்பெயர்!”
அல் குர் ஆன்:55:78
2. ஸலாம் சொல்லுவது:
“எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும் போது நீங்கள்உங்களைச் சார்ந்தவர்களுக்குஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் நிர்ணயிக்கப்பட்டதும் “அருள் வளங்கள்”கொண்டதும். தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்திதுணர்ந்து செயல்படக் கூடும்!
அல் குர் ஆன்:24:61
3. ஜைத்தூன் மரம்
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். அவனது
ஒளிக்கு உவமை இவ்வாறாகும் “ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது, அவ்விளக்கு கண்ணாடி கூண்டினுள் இருக்கிறது, அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை
போன்றுள்ளது. அவ்விளக்கு, கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத“அருல் வளமிக்க” ஒலிவ ஜைத்தூன் மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது.
அல் குர் ஆன்:24:25
4. தண்ணீர்
மேலும் நாம்வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரினை இறக்கினோம்.
அல் குர் ஆன்:50:9
5. ஹரம் ஷரீஃப்
“நிச்சயமாக, மனிதருக்காக எழுப்பப்பட்ட முதல் வணக்கத் தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்வளம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும்மையமாகவும் அது உள்ளது”
அல் குர் ஆன்:3:96
தண்ணீரை அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியுள்ளான் என குர் ஆன் சான்று வழங்குகின்றது.
அல்லாஹ் பத்ரின் வெற்றிக்கு பிண்ணனியில் இருக்கின்ற அல்லாஹ்வின் பேருதவியை எண்ணிப் பார்க்குமாறும், வெற்றியின் மூலம் கிடைத்த கனீமப் பொருட்களும் அல்லாஹ்வின் பேருபகாரம் தான் என்று கூறி நினைத்துப் பார்க்குமாறும் 8:7-10 வரையிலுள்ள வசனத்தில் கூறிவிட்டு பத்ர் வெற்றியின் சூட்சமத்தை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் நினைவுபடுத்துகிறான்.
“இதையும் நினைத்துப் பாருங்கள், அல்லாஹ் உங்களை சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மனநிம்மதியையும்,அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டுஅகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும் அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது தண்ணீரை பொழியச் செய்தான்”.
அல் குர் ஆன்:8:11
என் இறைவனே! என் சமூகத்தார் என்னை பொய்யென்று தூற்றிவிட்டனர்.இனி எனக்கும் அவர்களுக்கு இடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக!மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!இறுதியில் நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம்.பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை
நீரில்
மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 117-120
“மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம். உமதுகைத்தடியினால் கடல் நீரின்
மீதுஅடியும்! உடனே கடல்
பிளந்து அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகி விட்டது. அதே இடத்திற்கு நாம் ஃபிர் அவ்னின் கூட்டத்தாரையும்நாம் நெருங்கி வரச்செய்தோம்.மூஸாவையும், அவருடன்
இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம். பிறகு ஃபிர்அவ்னின் வகூட்டத்தாரை நாம் கடல்நீரில் மூழ்கடித்து விட்டோம்.
அல் குர் ஆன்:26: 62-66
மேற்கூறிய சான்றுகளில் இறைநம்பிக்கையாளர்களுக்குதண்ணீரை அல்லாஹ் அருளாகவும், இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகவும் ஆக்கியிருப்பதை குர் ஆனில் மூலம் சுட்டிக் காட்டுகிறான்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *19-04-2017*
No comments:
Post a Comment