Monday, 10 April 2017

ஜகாத் ஒரு எளிய அறிமுகம் தொடர் - 3

*வங்கித் தொகை அல்லது கையில் இருக்கும் பணம்:*




💳ஒருவர் வங்கியிலோ அல்லது கையிலோ ஓர் ஆண்டு கீழ்க்கண்ட அளவு பணம் வைத்திருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் பண விடயத்தில் ஜகாத் வெள்ளியைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. ஆக, இன்றைய நிலவரப்படி 36,840 ரூபாய்கள் ஒருவரிடம் இருந்தால் அவர் ஜகாத் கொடுக்க தகுதியுள்ளவர் ஆகிவிடுவார். ......

🌾உதாரணத்திற்கு ஒருவரிடம் 1 லட்சம் இருந்தால் கீழ்கண்ட முறைப்படி கொடுக்க வேண்டும்.

💳வங்கித் தொகை ரூ. 1,00,000

♻கொடுக்க வேண்டிய தொகை = ரூ. 1,00,000 ÷ 40 = ரூ. 2,500

*ஜகாத் வாங்க தகுதி உடையவர்கள்:*

🛍ஃபக்கீர்; - ஜகாத் கொடுக்கும் தகுதியில்லாதவர்;.மிஸ்கீன்; - செல்வம் ஏதும் இல்லாதவர்.ஜகாத் வசூலிப்பவருக்கு அவருக்கு கூலியாக அதிலிருந்தே கொடுக்க வேண்டும்.எவர்களின் இதயம் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதோ : இதன் கருத்து முஸ்லிம்களில் பலகீனமாக உள்ளவர்கள். அவர்களுக்கு ஜகாத் கொடுத்தால் அதன் மூலம் அவர்கள் பலப்பட்டு அவர்கள் ஈமான் உறுதி பெறும் என்றிருந்தால். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஜகாத் கொடுப்பது கூடாது. அடிமைகள்  அவர்களின் விடுதலைக்காக ஜகாத் கொடுக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் இப்படியான நிலையில் உள்ளவர்கள் இன்றைக்கு இருந்தால் அவர்களுக்கு கொடுக்கலாம். கடன்பட்டவர்கள் ஜகாத் தொகையை ஃபக்கீருக்கு கொடுப்பதை விட கடன்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர்.வழிபோக்கர்;.

*ஜகாத் கொடுக்க தகுதியில்லாதவர்கள்:*

❌காஃபிர் (இறைமறுப்பாளர்) பணக்காரன் நபிகளாரின் குடும்பத்திற்கு தந்தை, பாட்டனார் மகன், பேரன், மனைவி (அது போன்று மனைவி தன் கணவனுக்கு ஜகாத் கொடுக்க முடியாது.) இவர்கள் அல்லாத மற்ற உறவினர்கள் ஜகாத் வாங்க தகுதி உடையவர்களாக இருந்தால்
அவர்களுக்கு கொடுப்பதே சிறந்த்து.பள்ளிவாசல் கட்டுவதற்கு, மதரஸா கட்டுவதற்கு, ரோடு போடுவதற்கு, பாலம் கட்டுவதற்கு ஜகாத்
கொடுப்பது கூடாது.

❌மைய்யத்தை அடக்கம் செய்வதற்கு ஜகாத் செலவு செய்யக்கூடாது. ஏனெனில், “பெற்றுக்கொள்வது”
என்பது மேலே உள்ள சூழ்நிலைகளில் இல்லாத காரணத்தால் ஜகாத் கொடுக்க முடியாது.

✋🏻(ஜகாத்தை பெறுபவர் அதை தன் முழு இஷ்டப்படி செலவு செய்ய தகுதியுடையவராக
இருக்கவேண்டும். அது இல்லாத இடத்தில ஜகாத் கொடுக்க அனுமதியில்லை- இது ஒரு விதி)

👪உறவினர்களே ஜகாத் கொடுக்க முழுதகுதியுள்ளவர்கள் அவர்கள் மேலே சொல்லப்பட்ட ஜகாத்
வாங்கும் தகுதியில் இருந்தால்.

👨‍👩‍👦‍👦அதன் பின் முஹல்லா வாசிகள், ஊர் வாசிகள். இந்த அடிப்படையில் ஜகாத் கொடுக்கப்பட்டால்
ஏழைகள் இருக்க மாட்டார்கள்.

✨தன் ஊர், நாட்டில் உள்ளவர்களை விட மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மிகவும் தேவையுடைய
முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு கொடுப்பது கூடும்.

- பேரா. இஸ்மாயீல் ஹஸனீ

- நன்றி : அச்சு வடிவமைப்பு : மவ்லவி கலீல் பாகவி குவைத்.

முடிவுற்றது.

பதிவு நாள்: *10-04-2017*

No comments:

Post a Comment