⚡ *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்*⚡
*இன்றைய குர்ஆன் வசனம்*
📖அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 30:19)
🔸 *இன்றைய ஹதீஸ்*🔸
⚡ *கியாமத் நாளை நெருங்கிவிட்டது*⚡
⚡ مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ضُيِّعَتِ الأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ إِذَا أُسْنِدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ، فَانْتَظِرِ السَّاعَةَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 6496
⚡அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மனிதரிடம்), ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்‘ என்று கூறினார்கள். அவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?‘ என்று கேட்டார். அதற்கு, *“(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்‘* என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6496
பதிவு நாள்: *16-03-2017*
No comments:
Post a Comment