*அண்ணலாரின் வருகை அகிலத்திற்கு ஓர் அருட் கொடை தொடர் - 1*
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு*
🌾மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை
உடல் நெருப்பாய் கொதித்தது.
வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி صلى الله عليه وسلم
அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது “பல
கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம்
சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை ஒரு பெரிய பாத்திரத்தில் அமர வைத்து நீர்
ஊற்றினார்கள். நபி صلى الله عليه وسلم “போதும்! போதும்!” என்று
கூறினார்கள். அப்போதுதான் நபி صلى الله عليه وسلم அவர்களின்
சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான
துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப்
போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள்.
அதுதான் நபி صلى الله عليه وسلم அவர்களின் கடைசி சபையாகும்.
⭕அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு “மக்களே!
என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி صلى الله عليه وسلم கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத
கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்:
“யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ்
அழிப்பானாக! தங்களது தூதர்கள் அடக்கம்
செய்யப்பட்ட இடங்களை வணங்கும்
இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)
🔎தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம்
தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான்
முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து
விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது
கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன்
வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக்
கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி
ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும்
மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, “ஃபழ்லே!
நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.
பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக
சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி
நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள்.
அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது.
அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக்
கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை
மன்னியுங்கள்.”
☢ மற்றொரு அறிவிப்பில்,
“மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள்
குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள
உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில்
ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும்
அளவு அதிகாரம் பெற்றால்,
அன்சாரிகளில் நல்லோன் சொல்லை
ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும்.
(ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர்
அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு
வழங்கட்டுமா? அல்லது மறுமையில்
என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று
அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின்
அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக்
கொண்டார்” என்று நபி صلى الله عليه وسلم
கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் رضي الله عنه கூறுவதாவது:
நபி صلى الله عليه وسلم அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் رضي الله عنه
அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும்
தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்”
என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள்!
அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை
வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில்
உள்ளதை வழங்கட்டுமா என வினவினான்
என்றுதான் நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அதற்குத்
தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று
கூறுகிறாரே?” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் رضي الله عنه
எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார்.
எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார்
இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து
கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி,
ஸஹீஹ் முஸ்லிம்)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *03-03-2017*
No comments:
Post a Comment