Wednesday, 1 February 2017

கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள் - *🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் - 5 🌍🌍*


*🌍🌍கியாமத் நாளின் அடையாளங்கள் - 5 🌍🌍*

*🎯சிறிய அடையாளங்கள்*


*1.மகளின் தயவில் தாய்*

🔘பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து, மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.*
*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*
*நூல்: புகாரி 4777, 50*


*2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

🔘மிகவும் பின் தங்கியவர்கள் ஒட்டுமொத்தமாக பொருளாதாரத்தில் மிகவும் உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பதும் யுக முடிவு நாளுக்குரிய அடையாளங்களில் ஒன்றாகும்.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.*
*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*
*நூல்: புகாரி 4777*


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள்.*
*நூல்: புகாரி 50*


🔘இந்த நிலை இப்போது ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

*3.குடிசைகள் கோபுரமாகும்*

🔘அன்றைய மனிதன் பெரும்பாலும் குடிசைகளிலேயே வாழ்ந்தான். பணம் படைத்தவர்கள் ஓட்டு வீட்டில் வசித்தனர். உயரமாக அடுக்கு மாடிக் கட்டிடங்களை எழுப்பும் மூலப் பொருட்கள் அன்று கண்டு பிடிக்கப்படவில்லை.


*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.*
*நூல் : புகாரி 7121*

(இன்ஷா அல்லஹ் தொடரும்)

பதிவு நாள்: 01-02-2017.

No comments:

Post a Comment