*🕋 இன்றைய மார்க்க கேள்வி எண்*
367:
🎯 *அ) இப்லிஸின் சேனைகள் நரகில் எவ்வாறு தள்ளப்படுவார்கள்❓*
("படிக்க வேண்டிய வசனம் *சூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்) 26:91-100"*
✅பதில்:
_முகங்குப்புற_
ஆதாரம்:- *அல்குர்ஆன்: 26:94,95*
📖பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
(அல்குர்ஆன் : 26:94)
📕“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
(அல்குர்ஆன் : 26:95)
🎯 ஆ) *எத்தகைய கனவை யாரிடமும் கூற வேண்டாம் என்று பெருமானார் கூறினார்கள்❓*
✅பதில்:
_விருப்பமில்லாத கனவை_
ஆதாரம்:-
*புகாரி:* 6985,7044,
*முஸ்லிம்:* 4553
📒6985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி.
📙7044. அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், 'நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம். (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது' என்று கூறியதைக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி.
📋4553. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பல கனவுகளைக் கண்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இந்நிலையில் நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சத்தித்(து அது குறித்து தெரிவித்)தேன்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப் பட்டுவந்தேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். அவர், தாம் விரும்பாததைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அந்தக் கனவின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அந்தக் கனவைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
🍋1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
🍋2. இர்ஃபான் - பண்டாரவாடை 1
🍋3. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
🍋4. அபூதல்ஹா - திருநெல்வேலி 1
🍋5. நிஜாமுதீன் - பள்ளப்பட்டி 2
🍋6. அமீன் - திருநெல்வேலி 1
🍋7. முகம்மது இஸ்மாயில்
- அய்யம்பேட்டை(தஞ்சை) 2
🍋8. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
🍋9. பஷீருத்தீன் -சம்பைப்பட்டிணம் 2
🍋10. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🍋11. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
🍋12. ஜாஹிர் உசேன் - சென்னை(பட்டாபிராம்) 2
🍋13. முஹம்மது பைசல் காண் - திருநெல்வேலி 2
🍋14. முஹம்மது இக்ரீமா - திருநெல்வேலி 2
🍋15. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
🍋16. ஹக்கிம் - தென்காசி 2
🍋17. ஹாரிஸ் - சென்னை 2
🍋18. சிக்கந்தர் - சென்னை(தாங்கல்) 2
🍋19. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
💰1. நூகு அமீர் -கீழக்கரை 2
💰2. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
💰3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
💰4. பஷிர் அகமது - பசுபதிக்கோயில் (தஞ்சை) 1
💰5. ஹுசைன் - நாகர்கோவில் 2
💰6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
💰7. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
💰8. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
💰9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
10.முஜுப் - சென்னை(ராயபுரம்) 1
❇❇❇❇❇❇❇❇❇❇❇
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி (தஞ்சை) 1
❇❇❇❇❇❇❇❇❇❇❇
🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴
பதிவு நாள்: *03-02-2017*
No comments:
Post a Comment