🌲🎄💖🌷03-02-17🌷💖🎄⛳
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم
" அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
"
📚 அல்குர்ஆன் 40:16
🌲⛩🌷⛩🌷⛩💓🌷⛩⛩🌷🎄
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*
" பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என்னுடைய கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு அவன் (என்னைவிட்டுப்போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து) கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்” என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?” என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ (வேண்டாம்) அவனைக் கொல்லலாம் அல்லவா?” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ ”அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். இந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய் என்று கூறினார்கள்."
🎭அறிவிப்பாளர் :
உபைதுல்லாஹ் இப்னு அதீ(ரஹ்)
📓நூல் :
ஷஹீஹ் புகாரி - 6865
🌹🌲💕🌹💕🌲🌹💕🌲🌹💕🌲
🌹 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*
No comments:
Post a Comment