Sunday, 26 April 2020

தூய்மை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன



இஸ்லாமிய சட்டநூல்களில் முதல் பாடமே சுத்தம் தான்

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்ட போது முத­ல் அவர்களுக்கு சொன்ன கட்டளை

உன் ஆடையை தூய்மைபடுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக.                                      (அல் குர்ஆன் 74: 3 4)

இஸ்லாத்தின் அடிப்டை கட்டளையே தூய்மை தான் என்று விளங்க முடிகிறது. இன்னும் இஸ்லாம் இறைவனை நம்புகின்ற நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே தூய்மையை கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
தூய்மை என்பது இறை நம்பிக்கையில் பாதி
அறிவிப்பவர் : அபூ மா­க் அல் அஷ் அரீ (ர­) நூல் : முஸ்­ம் 381

உலகம் அசுத்தமாக நினைக்கிற காரியங்களில் மட்டுமல்லாது அதற்கு மேலும் இஸ்லாத்தில் சுத்தத்தின் அளவுகோல் கடுமையாக இருக்கிறது.

طاهر مطهر- طاهر غير مطهر – نجس என்றெல்லாம் தண்ணீரை தரம் பிரித்திருக்கிறது இஸ்லாம்.

ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம்

ஸம்ஸம் தண்ணீர் உள்ள வாளியை எடுத்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பின்பு அதிலிருந்து குடித்துவிட்டு உளூவும் செய்தார்கள். (ஆதாரம் - அஹ்மத்)

மழை நீரை கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதரமாக 
உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11)
(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம். (அல்ஃபுர்கான், 25:48)

கடல் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம் 

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பிரயாணம் செய்கின்றோம் எங்களுடன் கொஞ்சம் தண்ணீரை எடுத்துச் செல்கின்றோம், அதைக்கொண்டு நாங்கள் உளூ செய்தால் தாகித்திருக்க வேண்டி வரும் கடல் தண்ணீரால் நாங்கள் உளூ செய்யலாமா? என ஒரு நபித்தோழர் கேட்டார். கடல் தண்ணீர் சுத்தமானது, அதில் செத்த பிராணிகள் ஹலாலானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

இஸ்லாத்தில் இறைவனை வணங்குவதற்கு அடையாளமான தொழுகைக்கு உளூ என்ற தூய்மையை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த வணக்கம் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தூய்மையில்லாமல் தொழுகை இல்லை அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : முஸ்­ம் 382

அல்லாஹ்வை ஒரு நாளில் 5 தடவைகள் தொழுகைக்கு செல்லும் போதும் அதற்கென்ற பிரத்தியோக தூய்மைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும் கைகளை மூழங்கை வரைக்கும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை நீரால் தடவுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 5:6)

இவை தவிர உட­லுள்ள மற்ற உறுப்புகளையும் தூய்மைபடுத்தவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

வாரத்தில் ஒரு நாளாவாவது தன் தலையையும் உட­ன் மற்ற பகுதிகளையும் கழுவுவது ஒரு முஸ்­ம் மீது கடமை.
                                                                                          அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : புகாரி 898

முதல் காரணம் நம்முடைய இரண்டு கைகள் தான். இதன் வழியாக தான் எல்லாவிதமான கிருமிகளும் தொற்றுகின்றன.

ஓளுவையும் குளிப்பையும் பர்ளாக – சுன்னத்தாக - முஸ்தஹப்பாக இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இஸ்லாம் ஒரு மனிதன் தூங்கி எழுந்ததி­ருந்தே தூய்மையை கடைபிபடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்ற வரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம்.
                                                                                  அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : முஸ்­ம் 468

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கி மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.
                                                                                        அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : முஸ்­ம் 403

தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச்செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம். வேண்டும் என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறுகிறார்கள்

இஸ்லாம் பல் துலக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பல் துலக்குவது வாய்க்கு சுத்ததையும் இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர­) நூல் : நஸாயீ 5

142- என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-887:

அபூஹூரைரா (ரலி)
மனித வாய் பகுதியில் நோய் ஏற்படுத்தக் கூடிய நுண்கிருமிகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது ஸ்டரப்டோகோக்கி என்ற பாக்டீரியாக்கள் . இவை 5 வயது முதல் 15 வரை உள்ளவர்களுக்கு ருமெட்டிக் என்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த காய்ச்சல் பல வாரங்களாகவும் மாதங்களாகவும் நீடிக்கிறது.

பல் துலக்குவதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடுகின்றன.மீதமுள்ள உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பற்களின் மஞ்சள் தன்மையை நீக்கி பிரகாசமாக்குகிறது. பற்களின் ஈறுகளில் உள்ள காயங்களை அகற்றுகிறது. கிருமிகள் வளருவதை தடுக்கிறது.

தூய்மையின் உச்சகட்டம் நம் உடல் முழுவதும் தண்ணீரால் தேய்த்து குளிப்பதாகும்.

இதனால் நாம் பல்வேறு விதமான நோய்களிலி­ருந்து பாதுகாப்பு அடையமுடிகிறது.

மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்

மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளைசுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாகசுத்தம் செய்தல் வேண்டும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் அடையாத காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத பொருட்களை பன்மடங்கு பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நுண்ணோக்கிகள் இல்லாத காலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருப்பதால் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்­ம் தூங்கி எழுந்ததி­ருந்தே தூய்மையாகவும் நோய்கள் தாக்கமாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இன்னொரு கட்டளையையும் இஸ்லாம் இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கி மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­) நூல் : முஸ்­ம் 403

இது காலையில் மட்டுமல்லாமல் இறைவனை வணங்குவதற்காக உளூ என்ற தூய்மையை செய்யும் போது மூக்கை சுத்தம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்தி கூறுகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் உளூ செய்தால் அவர் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்யட்டும்
அறிவிப்பவர் : அபூ ஹீரைரா (ர­) நூல் : முஸ்லி­ம் 401

மூக்கை சுத்தம் செய்வதால் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளன.
.மூக்கின் உட்பகுதியில் மறைந்திருக்கும் அதிகமான நுண்துகள்களையும் தூசுகளையும் வெளியேற்றுகிறது. அவைகளில் சில காற்றில் பரவக்கூடிய பூஞ்சை கிருமிகளின் விதைகளும் கேடு விளைவிக்கும் கிருமிகளாகவும் உள்ளன
மனிதனுக்கு பல விதமான தோல்நோய்களையும் நுரையீரல் வீக்கம் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உருவாக்குகிறது.
ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் சுத்தம் செய்வதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடுகின்றன .

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்ட போது முத­ல் அவர்களுக்கு சொன்ன கட்டளைஉன் ஆடையை தூய்மைபடுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக.
(அல் குர்ஆன் 74: 3 4)

இஸ்லாத்தின் அடிப்டை கட்டளையே தூய்மை தான் என்று விளங்க முடிகிறது.

இஸ்லாம் இறைவனின் மார்க்கமாக இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தூய்மை முறைகளை கூறிவிட்டது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 26-04-2020

No comments:

Post a Comment