Monday, 27 April 2020

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள்

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)


تِلْكَ الدَّارُ الْآَخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ  عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
முஸ்லிம் சமூகத்தின் சமீபத்திய வாழ்வியல் போக்கில் முன்னோர்கள என்ற வார்த்தையை அசூசையான ஒரு சொல்லாக சிலர் மாற்றி விட்டனர்.

ஆனால், தங்களது தற்போதைய தலைவர்களின் பேச்சை ரசிக்கலாம் வாதாடும் திறனை பாராட்டலாம். ஆனால் ஈமானுக்கும் இஸ்லாமிற்கும் அவர்களை முன்னுதாரமாக கருத முடியாது என்ற நிலையிக்கு இயக்கம் அமைப்புக்களை சார்ந்தவர்களே முன்னோர்கள் நல்லோர்களின் வரலாறுகளை நாடி வந்து விட்டார்கள்.

முன்னோர்களின் வாழ்க்கையும் வரலாறும் நமது ஈமானிய வாழ்க்கைகும் இவ்வுலக வாழ்க்கைகும் முன்னுதாரனமாக திகழக்கூடியது. அதிலுள்ள பாடங்களும் படிப்பினைகளும் நம்மை கரை சேர்க்க கூடியவை.

கடலில் த்த்தளிக்க கூடியவ்னுக்கும் ஒரு கட்டுமரம் கிடைப்பது எப்படியோ அது போல வாழ்க்கை கடலில் நம்மை கரை சேர்க்க உதவும் கட்டுமரங்களாக் முன்னோர்களின் வரலாறுகள் அமைந்திருக்கிற்ன்றன்.

அவர்களை மதிக்கவும் அந்த வரலாறுகளை படிக்கவும் நாம் அக்கறை செலுத்த வேண்டும் அந்த வகையில் ஒரு வரலாற்றுக் குச் சொந்தக் கார்ர்க் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)

அன்றைய உலகின் மிகப்பெரிய வல்லரசை 2 ½ வருடங்கள் தான் ஆட்சி செய்தார் ஆனால் வரலாற்றில் ஆழமாகவும் அழுத்தமாகவும் தடம் பதித்தார்.

அவருக்கு கிட்த்த சிறப்பு பெயர்கள்
·         இரண்டாம் உமர்
·         ஐந்தாவது கலீபா
·         முதல் நூற்றாண்டின் முஜத்தித்

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களோடு ஒப்பிடுகையில் நாமெல்லாம் மிகச் சாதாரண நிலையில் வாழ்கிறோம்.  - நாம் சுல்தான்களாக இருந்தால் கூட –அவரைப் போன்ற சுல்தானாக இருக்க முடியாது.

ஒரு கோடியே முப்பத்தியிரண்டு இலட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட உமைய்யா ஆட்சியின் சக்ரவர்த்தி அவர். இன்றைய 37 நாடுகள் அவரது ஆட்சியின் குடையின் கீழ் இருந்தனா. ஆனால் மான்புக்கும் மகத்தான பெருமைக்கும் சொந்தக்கார்ர் அவர்.
அவர் காலத்தில் மக்கள் மிகுந்த செழிப்போடு வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. ஜகாத்தை பெறுவதற்கு ஆளில்லை
عن يحيى بن سعيد قوله (بعثني عمر بن عبد العزيز على صدقات افريقيا فاقتضيتها وطلبت فقراء نعطيها ايها لهم فلم نجد فيها فقيرا ولم نجد من يا خذها منا وقد اغنى عمر بن عبد العزيز الناس فاشتريت بها رقابا فأعتقتهم

அவரது பெறுமைகளுக்கு ஒரு முக்கிய காரணம் முஸ்லிம் அரசாங்கத்தின் ஆட்சியதிகாம் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்கு போயிருந்த நிலையில் அதை மிகச் சிறந்த நிலைக்கு மீட்டு வந்தார்.

அலி ரலி அவர்களுக்குப்பிறகு இஸ்லாமிய ஆட்சி தடம் மாறியது. மக்களாட்சி மன்னராட்சியாக மாறியது. உமய்யா அரச்வம் ஆட்சி செய்த்தது. மன்னர்கள் மக்களை அடக்குமுறை ஆட்சி செய்பவர்களானார்கள். மன்னரது குடும்பம் மக்களது சொத்துக்களையும் நாட்டின் பொதுச் சொத்துக்களையும் சுரண்டி  சுகவாழ்வில் திழைத்த்து.

ஹிஜ்ரி 61 ம் ஆண்டு உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) மதீனாவில் பிறந்தார். இவருடைய தாய் லைலா அம்மையார் உமர் பின் கத்தாப் (ரலி) யின் மகன் ஆஸிமின் மக்ளாவார்.
، ويرجع نسبه من أمه إلى عمر بن الخطاب حيث كانت أمه هي أم عاصم ليلى بنت عاصم بن عمر بن الخطاب وبذلك يصبح الخليفة عمر بن الخطاب جد الخليفة عمر بن عبد العزيز

மதீனத்து அறிஞர்களிடம் கல்வி கற்று மிகச் சிற்ப்பாக வளர்ந்தார்.  அவரது அறிவும் திறனும் ஒழுக்கமும் பாராட்டிற்குரியதாக இருந்த்து.

وقد تلقى علومه وأصول الدين على يد صالح بن كيسان في المدينة المنورة واستفاد كثيراً من علماءها

அப்போதைய இஸ்லாமிய அரசாங்கத்தின் தலை நகராக திமஸ்க் டமாஸ்கஸ் இருந்த்து. உமர் பின் அப்துல் அஜீஸின் சிறிய தந்தை அப்துல் மலிக் பின் மர்வான் மன்னராக இருந்தார். மன்னர் தனது சகோதர்ர் மகானான உமரை டமாஸ்கஸுக்கு அழைத்து தனது மகளை திருமணம் செய்து வைத்தார்.

மனவியை சந்தித்த முதல் நிமிட்த்திலேயே அவரது ஆப்ரணங்கள் கலைந்து விடுமாறு சொன்னார். அது பொதுச் சொத்து நமக்கு தேவையில்லை என்றார். ஒரு மன்னரின் மகளாக இரண்டு அரசர்களின் சகோதரியாக இருந்த அந்த அம்மையார் தனது நகைகளை பைத்துல் மாலுக்கு வழங்கினார்.

ஹிஜிர் 89 ல் மதீனாவின் கவர்னராக நியமிக்கப்பட்டார். 91 ல் முழு ஹிஜாஸின் பொறுப்பும் சேர்த்து தரப்பட்ட்து.
மதீனாவின் ஆளுநராக பொறுப்பேற்க மூன்று நிபந்தனைளை விதித்தார்

1.   மக்களிடம் நீதமாகவே நடந்து கொள்வேன். பைத்துல் மாலுக்காக மக்களிடமிருந்து அநீதமாக பணம் பறிக்க மாட்டேன். இதனால் மதீனாவிலிருந்து அரசருக்கு வர வேண்டிய தொகை குறைய வாய்ப்பு உணடு.
2.   இதுவரை ஹஜ்ஜு செய்யாத காரணத்தால் பொறுப்பேற்ற முதல் வருடம் ஹஜ்ஜு செய்ய அனுமதிக்க வேண்டும்
3.   மக்களுக்காக  செலவிடும் தொகைகளை அனுமதிக்க வேண்டும்.  
அவருக்கு அனுமதி தரப்பட்ட்து. அதன் பிறகே பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதீனாவின் பொறுப்பை ஏற்றதுமே சட்ட அறிஞர்களின் பத்து பேரை தேர்ந்தெடுத்து மஜ்லிஸ் ஷூரா அமைத்தார்.

அவரே பெரிய சட்ட அறிஞராக பக்தியாளராக இருந்தார்.

இமாம் மாலிக் சுப்யான் பின் உயையானா போன்ற அறிஞர்களே அவரை இமாம் என்று குறிப்பிடுகிறார்கள்.
. اتفقت كلمة المترجمين على أنه من أئمة زمانه، فقد أطلق عليه كل من الإمامين: مالك وسفيان بن عيينه وصف إمام،
 அவருக்கு நாங்கள் கல்வி கறிபிக்க செல்வோம்; ஆனால் நாங்கள் தான் அவரிடமிருந்து கற்று வருவோம் என்று முஜாஹித் கூறுகிறார்.
وقال مجاهد: أتيناه نعلمه فما برحنا حتى تعلمنا منه،
وقال ميمون بن مهران: كان عمر بن عبد العزيز معلم العلماء،
நீதியை நிலை நாட்டுவதில் உமர் (ரலி) யோடும் பக்தியில் ஹஸனுல் பஸரி அவர்களோடும் கல்வியில் ஜுஹரி அவர்களோடும் ஒப்பிட்ட்த்தகுந்தவர் என்று தகபி கூறுகிறார்.
قال فيه الذهبي: يعد في حسن السيرة والقيام بالقسط مع جده لأمه عمر، وفي الزهد مع الحسن البصري وفي العلم مع الزهري.

மதீனாவின் ஆளுநராக் இருந்த அவரை மன்னர் சுலைமான் பின் அப்துல் மலிக் தனது அரசில் அமைச்சராக உயர்த்தினார். பக்கத்தில் வைத்துக் கொண்டார். மன்னர் சுலைமானுக்கு அவர் மீது தனி மரியாதை இருந்த்து. ஒரு தலை சிறந்த அமைச்சராக மன்னரை நெறிப்படுத்துவராக உமர் இருந்தார்.

மன்னர் சுலைமான் ஹஜ்ஜுக்குச் சென்ற போது உமரும் உடன் சென்றார். அரபாவின் கூட்ட்த்தை பார்த்த மன்னர்  எவ்வளவு கூட்டம்! அல்லாஹ்வுக்குத்தான் இதன் எண்னிக்கை தெரியும் என்று சொன்னார். உமர் சொன்னார்  இன்று உங்களது மக்களாக இருக்கிற இவர்கள் நாளை உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்களாக அல்லஹ்வின் முன்னிலையில் நிற்கக் கூடும் என்றார். திடுக்கிட்ட மன்னர் சுலைமான் அழுதார். அரசர்கள் மக்களை நினைத்து அழுவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம் அது.
قيل إن سليمان بن عبد الملك حج فرأى الخلائق بالموقف فقال لعمر: أما ترى هذا الخلق لا يحصي عددهم إلا الله ؟ قال: هؤلاء اليوم رعيتك، وهم غداً خصماؤك. فبكى بكاءً شديداً  

மன்னர் சுலைமான் மரணப்படுக்கையிலிருந்த போது தனக்கு அடுத்த ஆட்சித்தலைவரைப் பற்றிய செய்தியை (வஸிய்யத்) ஜும் ஆவில் படிக்க ஏற்பாடு செய்திருந்தார். அவரது மகன் வலீது அடுத்த ஆட்சியாளராக அறிவிக்கப்படுவதுதான் வாடிக்கை

ஆனால் வஸிய்யத் வாசிக்கப்பட்ட்து. தொழுகையாளியாக வந்திருந்த உமர் பின் அப்துல் அஜீஸின் பெயரை வாசிக்கப் பட்ட்து,

அப்போது உமர் பின் அப்துல் அஜீஸீன் வாயிலிருந்து வந்த வார்த்தை إنا لله وإنا أليه راجعون

(பதவிகளுக்காக இன்று நாம் எப்படி எல்லாம் சண்டையிட்டுக் கொள்கிறோம். வரலாறு யாரை நினைவில் வைத்திருக்கிறது பாருங்கள்!

உம்ர் பின் அப்துல் அஜீஸ் சொன்னார்எனது வாகனமே எனக்கு போதுமானது. எனது கூடாரமே எனக்கு மேல். دابتي كفايتي ، وفسطاطي اوسع لي

இது எனது ஆலோசனை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது,. மக்களே உங்களுகு பிரியமானவரை நீங்கள்  தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மக்கள் சத்தமிட்டனர் எங்களுக்கு நீங்கள் தான் வெண்டும்.

قام فيهم خطيبًا، فحمد الله ثم أثنى عليه وصلى على نبيه ثم قال: أيها الناس إني قد ابتليت بهذا الأمر على غير رأي مني فيه ولا طلب له... ولا مشورة من المسلمين، وإني خلعت ما في أعناقكم من بيعتي، فاختاروا لأنفسكم خليفة ترضونه. فصاح الناس صيحة واحدة: قد اخترناك يا أمير المؤمنين ورضينا بك، فَوَّلِ أمرنا باليمن والبركة.  

அமைச்சராக இருந்த போது மன்னர் சுலைமானை அழ வைத்தவர். தான் அரசரானவுடன் மாறிவிட்வில்லை.

ஆட்சிப்பொறுப்பேற்ற அன்று அழுதவர்
மக்களுக்காக என்னிடம் வழக்காடுபவராக பெருமானார் (ஸ்ல) அவர்களை கான்பேனே! என்ன பதில் சொல்வேன்.

وعن عطاء بن أبي رباح قال: حدثتني فاطمة امرأة عمر بن عبد العزيز: أنها دخلت عليه فإذا هو في مصلاه، سائلة دموعه، فقالت: يا أمير المؤمنين، ألشئ حدث؟ قال: يا فاطمة إني تقلدت أمر أمة محمد صلى الله عليه وسلّم فتفكرت في الفقير الجائع، والمريض الضائع، والعاري المجهود، والمظلوم المقهور، والغريب المأسور، وذي العيال في اقطار الأرض، فعلمت أن ربي سيسألني عنهم، وأن خصمي دونهم محمد صلى الله عليه وسلم، فخشيت أن لا تثبت لي حجة عن خصومته، فرحمت نفسي فبكيت.

ஆட்சியில் அமர்ந்த்தும் முதல் நடவடிக்கை
பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் அரசு கஜானாவிற்கு அனுப்பினார். முதலில் தனது குடும்பத்திலிருது ஆரம்பித்தார். தனக்கு தரப்பட்ட சாரட் வண்டியை மாளிகை உதறினார்ன்.
மன்னர் குடும்பத்தினர் வைத்திருந்த சொத்துக்களை திருப்பி அளிக்க உத்தரவிட்டார். மக்களிடமிருந்து பறீக்கப்பட்ட சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டால் உரியவர்களுக்கும் இல்லை எனில் கருவூலத்திற்கும் கொடுக்க உத்த்ரவிட்டார்.
அரச் குடும்பத்திற்கான மானியங்களை நிறுத்தினார்.
அரச பணியில் உள்ளவர்கள் வேலை செய்தால் மட்டுமே சம்பள பெற முடிய்ம் என்றார்,

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) 21 தீனார் விட்டுச் சென்றார்அடக்கச் செலவுக்கு போக 11 தீனார் மிச்சமானது அது அவ்ருடைய 11 ஆண்மக்களுக்கு பங்கு வைக்கப் பட்டது.
உங்களது பிள்ளைகளுக்கு என்ன வைத்துச் செல்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட்து.
அவர்கள் நல்லவர்களாக இருப்பின் அவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன்
கெட்டவர்களாக இருப்பின் அவர்களைப் பற்றி நான் கவலைப்பட்த் தேவையில்லை என்று சொல்லி விட்டு இந்த ஆயட்த்தை ஓதினார்,

إِنَّ وَلِيِّي اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ
உமர் பின் அப்துல் அஜீஸி (ரஹ்அவர்களை தொடர்ந்து இரண்டாவதாக ஆட்சிக்கு வந்த ஹிஷாம் பின் அப்துல் மலிக் தன் 11 மக்களுக்கு தலா 10 இலட்சம் வீதம் விட்டுச் சென்றார்.

அப்துர ரஹ்மான் பின் காஸிம்  என்பவர் கூறுகிறார்.
உமர் பின் அப்துல் அஜீஸின் மக்கள் ஒரு ஜிஹாதுக்கு 100 குதிரைகளை கொடுத்தனர்.  அப்பொது  ஹிஷாமின் மக்கள் பிச்சை எடுத்து திரிந்தனர்.

அல்லாஹ் நல்லவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மறு உலகத்தில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் மரியாதையை கொடுக்கிறான்.

கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்: 27-04-2020.

Sunday, 26 April 2020

இறுதி நாள் நெருகிக் கொண்டிருக்கிறது


உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :-

உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)
பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
வானம் பிளந்து விடும்போது (84:1)
வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது... ''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள். (புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...
'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது' ' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும ். (இப்னுமாஜா)
(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)
(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)
சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள். (திர்மிதி)

காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)
எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.  (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)
முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.  (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)
பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)
பருவ மழைக்காலம் பொய்க்கும்.
திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.
பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.  (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)
(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)
பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)
ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.
(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.
ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.
பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.
பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)
உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)
முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில்
கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)

முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள ். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)
எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?
மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.
விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.
இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும்,

அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன?

என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!
இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!
நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!
இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)
மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள ். (திருக்குர்ஆன் 21:1)

சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 26-04-2020

தூய்மை பற்றி இஸ்லாம் கூறுவதென்ன



இஸ்லாமிய சட்டநூல்களில் முதல் பாடமே சுத்தம் தான்

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்ட போது முத­ல் அவர்களுக்கு சொன்ன கட்டளை

உன் ஆடையை தூய்மைபடுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக.                                      (அல் குர்ஆன் 74: 3 4)

இஸ்லாத்தின் அடிப்டை கட்டளையே தூய்மை தான் என்று விளங்க முடிகிறது. இன்னும் இஸ்லாம் இறைவனை நம்புகின்ற நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே தூய்மையை கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
தூய்மை என்பது இறை நம்பிக்கையில் பாதி
அறிவிப்பவர் : அபூ மா­க் அல் அஷ் அரீ (ர­) நூல் : முஸ்­ம் 381

உலகம் அசுத்தமாக நினைக்கிற காரியங்களில் மட்டுமல்லாது அதற்கு மேலும் இஸ்லாத்தில் சுத்தத்தின் அளவுகோல் கடுமையாக இருக்கிறது.

طاهر مطهر- طاهر غير مطهر – نجس என்றெல்லாம் தண்ணீரை தரம் பிரித்திருக்கிறது இஸ்லாம்.

ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம்

ஸம்ஸம் தண்ணீர் உள்ள வாளியை எடுத்து வரும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பின்பு அதிலிருந்து குடித்துவிட்டு உளூவும் செய்தார்கள். (ஆதாரம் - அஹ்மத்)

மழை நீரை கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதரமாக 
உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11)
(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம். (அல்ஃபுர்கான், 25:48)

கடல் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஆதாரம் 

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பிரயாணம் செய்கின்றோம் எங்களுடன் கொஞ்சம் தண்ணீரை எடுத்துச் செல்கின்றோம், அதைக்கொண்டு நாங்கள் உளூ செய்தால் தாகித்திருக்க வேண்டி வரும் கடல் தண்ணீரால் நாங்கள் உளூ செய்யலாமா? என ஒரு நபித்தோழர் கேட்டார். கடல் தண்ணீர் சுத்தமானது, அதில் செத்த பிராணிகள் ஹலாலானது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

இஸ்லாத்தில் இறைவனை வணங்குவதற்கு அடையாளமான தொழுகைக்கு உளூ என்ற தூய்மையை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த வணக்கம் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தூய்மையில்லாமல் தொழுகை இல்லை அறிவிப்பவர் : இப்னு உமர் (ர­) நூல் : முஸ்­ம் 382

அல்லாஹ்வை ஒரு நாளில் 5 தடவைகள் தொழுகைக்கு செல்லும் போதும் அதற்கென்ற பிரத்தியோக தூய்மைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் தொழுகைக்கு தயாரானால் உங்கள் முகங்களையும் கைகளை மூழங்கை வரைக்கும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுடைய தலைகளை நீரால் தடவுங்கள். உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 5:6)

இவை தவிர உட­லுள்ள மற்ற உறுப்புகளையும் தூய்மைபடுத்தவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

வாரத்தில் ஒரு நாளாவாவது தன் தலையையும் உட­ன் மற்ற பகுதிகளையும் கழுவுவது ஒரு முஸ்­ம் மீது கடமை.
                                                                                          அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : புகாரி 898

முதல் காரணம் நம்முடைய இரண்டு கைகள் தான். இதன் வழியாக தான் எல்லாவிதமான கிருமிகளும் தொற்றுகின்றன.

ஓளுவையும் குளிப்பையும் பர்ளாக – சுன்னத்தாக - முஸ்தஹப்பாக இஸ்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இஸ்லாம் ஒரு மனிதன் தூங்கி எழுந்ததி­ருந்தே தூய்மையை கடைபிபடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்ற வரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம்.
                                                                                  அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : முஸ்­ம் 468

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கி மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான்.
                                                                                        அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ர­) நூல் : முஸ்­ம் 403

தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச்செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம். வேண்டும் என்று மருத்துவர்கள் இப்பொழுது கூறுகிறார்கள்

இஸ்லாம் பல் துலக்குவதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பல் துலக்குவது வாய்க்கு சுத்ததையும் இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர­) நூல் : நஸாயீ 5

142- என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி-887:

அபூஹூரைரா (ரலி)
மனித வாய் பகுதியில் நோய் ஏற்படுத்தக் கூடிய நுண்கிருமிகள் உள்ளன. அவைகளில் முக்கியமானது ஸ்டரப்டோகோக்கி என்ற பாக்டீரியாக்கள் . இவை 5 வயது முதல் 15 வரை உள்ளவர்களுக்கு ருமெட்டிக் என்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இந்த காய்ச்சல் பல வாரங்களாகவும் மாதங்களாகவும் நீடிக்கிறது.

பல் துலக்குவதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடுகின்றன.மீதமுள்ள உணவுப் பொருட்கள் நீக்கப்பட்டு பற்களின் மஞ்சள் தன்மையை நீக்கி பிரகாசமாக்குகிறது. பற்களின் ஈறுகளில் உள்ள காயங்களை அகற்றுகிறது. கிருமிகள் வளருவதை தடுக்கிறது.

தூய்மையின் உச்சகட்டம் நம் உடல் முழுவதும் தண்ணீரால் தேய்த்து குளிப்பதாகும்.

இதனால் நாம் பல்வேறு விதமான நோய்களிலி­ருந்து பாதுகாப்பு அடையமுடிகிறது.

மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்

மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளைசுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாகசுத்தம் செய்தல் வேண்டும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த அறிவியல் வளர்ச்சியும் அடையாத காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத பொருட்களை பன்மடங்கு பெரிதுபடுத்தி பார்க்கக்கூடிய நுண்ணோக்கிகள் இல்லாத காலத்தில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருப்பதால் மட்டுமே கூறியிருக்கிறார்கள்.

ஒரு முஸ்­ம் தூங்கி எழுந்ததி­ருந்தே தூய்மையாகவும் நோய்கள் தாக்கமாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இன்னொரு கட்டளையையும் இஸ்லாம் இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் தூங்கி எழுந்தால் அவருடைய மூக்கி மூன்று முறை தண்ணீரை செலுத்தி அதை சிந்தட்டும். ஏனென்றால் ஷைத்தான் அவருடைய மூக்குத் துவாரத்தில் இருக்கிறான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­) நூல் : முஸ்­ம் 403

இது காலையில் மட்டுமல்லாமல் இறைவனை வணங்குவதற்காக உளூ என்ற தூய்மையை செய்யும் போது மூக்கை சுத்தம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் வ­யுறுத்தி கூறுகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
உங்களில் ஒருவர் உளூ செய்தால் அவர் மூன்று முறை மூக்கை சுத்தம் செய்யட்டும்
அறிவிப்பவர் : அபூ ஹீரைரா (ர­) நூல் : முஸ்லி­ம் 401

மூக்கை சுத்தம் செய்வதால் பல்வேறு விதமான நன்மைகள் உள்ளன.
.மூக்கின் உட்பகுதியில் மறைந்திருக்கும் அதிகமான நுண்துகள்களையும் தூசுகளையும் வெளியேற்றுகிறது. அவைகளில் சில காற்றில் பரவக்கூடிய பூஞ்சை கிருமிகளின் விதைகளும் கேடு விளைவிக்கும் கிருமிகளாகவும் உள்ளன
மனிதனுக்கு பல விதமான தோல்நோய்களையும் நுரையீரல் வீக்கம் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உருவாக்குகிறது.
ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் சுத்தம் செய்வதால் இந்த கிருமிகள் வெளியேற்றபடுகின்றன .

இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்ட போது முத­ல் அவர்களுக்கு சொன்ன கட்டளைஉன் ஆடையை தூய்மைபடுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக.
(அல் குர்ஆன் 74: 3 4)

இஸ்லாத்தின் அடிப்டை கட்டளையே தூய்மை தான் என்று விளங்க முடிகிறது.

இஸ்லாம் இறைவனின் மார்க்கமாக இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தூய்மை முறைகளை கூறிவிட்டது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 26-04-2020

Thursday, 2 April 2020

தொற்று நோய் பற்றி இஸ்லாம்

👹தொற்று நோய் பற்றி இஸ்லாம் கூறுவது‼


உணவுக்கலப்படத்தால் உயிரிழப்புகள் ஆயிரக்கணக்கில் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தை பொறுத்த வரை சின்னச் சின்ன சிரமம் கொடுப்பது கூட அவனை இஸ்லாத்தை விட்டுமே வெளியாக்கிவிடும், என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.  தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும், என்றும் (யாரும் யாருக்கும்) தீங்கிழைப்பதோ பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சிரமம் கொடுப்பதோ கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து ஏராளமான சட்டங்களை மார்க்க வல்லுனர்கள் கூறியுள்ளனர். எந்த ஒரு தனி நபரும் மற்றவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படுத்தக்கூடாது. (அல்லாஹ்வின் நாட்டப்படி) நோயாளியின் கிருமி மற்றவர்களுக்கு தொற்றும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட நபர், ரொட்டி மாஸ்டராகவோ பொது சந்தையில் விற்பனையாளராகவோ இருக்கக்கூடாது. இது போன்ற விதிமுறைகளை இந்த நபி மொழி நமக்கு சொல்லித்தருகிறது. நபி (ஸல்) அவர்களே தும்மினால் கூட உம்மத்தின் படிப்பினைக்காக கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374)

நபி (ஸல்) அவர்களுடைய எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட நபி (ஸல்) அவர்கள் தும்மல் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். காலரா, அம்மை போன்ற கொடிய நோய் ஓர் ஊரில் பரவலாக இருந்தால் அந்த ஊருக்கு நீங்கள் வராதீர்கள். நீங்ள் அந்த ஊரில் இருந்தால் அவ்வூரை விட்டும் வெளியேறாதீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த நபி மொழி, ஒரு நோயாளி மற்றவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்பது பற்றியும் மற்றவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும், என்பது பற்றியும் அழகான வழிகாட்டுதலை கொடுக்கிறது. தொற்று நோயின் மீது ஈமான் கொள்ளக்கூடாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நடக்கிறது.

இந்த உலகம் காரணங்களின் அடிப்படையில் இயங்குகிறது. எனவே நோய்க்கிருமி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சென்றுவிட்டால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவருக்கும் அதே நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே அந்த ஊருக்கு செல்லாமல் அந்த நோய் வராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும். இதனால் தொற்று நோயின் மீது ஈமான் கொள்வதை விட்டும் தப்பிக்க முடியும்.

ஜாஹிலிய்யா (மௌட்டீக) காலத்தில் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் கிடையாது. ஏகத்துவத்துக்கு முரணாக பல இணைவைப்பு கொள்கைகளை நம்பியிருந்தது போல் தொற்று வியாதியையும் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை உடைத்தெறிவதற்காகவே தொற்று வியாதி என்பதே கிடையாது என்று நபி (ஸல்) வலியுறுத்தினார்கள்.

தற்காலத்திலும் அது போன்றதொரு நம்பிக்கை இருந்தால் தொற்று நோய் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லவேண்டும். வியாதி பாதித்த ஊரில் இருப்பவர் ஆரோக்கியமானவராக இருந்தாலும் அந்த ஊரை விட்டும் வெளியே செல்லவேண்டாம், என்று நபி (ஸல்) அறிவுறுத்தியிருப்பது தூர நோக்கு சிந்தனை மிக்கது என்பது மட்டுமல்ல; 19-ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன மருத்துவக் கொள்கையை 6-ம் நூற்றாண்டிலேயே நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு அறிவித்துள்ளார்கள்.

அதாவது, நோயால் பாதிக்கப்பட்ட ஊரில் ஒருவர் வெளிப்படையாக ஆரோக்கியமாக தோன்றினாலும் அவருடைய உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்திருக்கலாம். ஆனால் மருத்துவ ஆய்வின் படி அவரிடமிருந்து நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. அல்லது அவருக்கு சில நாட்களுக்குப் பின் நோயின் அறிகுறி தென்படலாம். சில நோய்க்கிருமிகள் இரண்டு நாட்களிலேயே உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் சில நோய்க்கிருமிகள் ஆறு மாதங்களுக்குப் பிறகே  உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர், நாம் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறோம், என்று நினைத்து வெளியூருக்குச் சென்றால் நோயின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஊர் மக்களுக்கும் கிருமி பரவ காரணமாகிவிடுவார். (அல் அத்வா பைனத்திப்பி வஹதீஸி முஸ்தபா (ஸல்))

நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகம் வைத்திருப்பவர் (ஒட்டகத்தை) ஆரோக்கியமான ஒட்டகம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).

நோய் நம்மைத் தொற்றிவிடாமல் இருப்பதற்காக சுற்றுச்சூழலின் தீங்கிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் பல போதனைகளை போதித்திருக்கிறது இஸ்லாம். (சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக) நபியவர்களும் நபித்தோழர்களும் தோட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். தோட்டங்களில் தொழுவதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்கள். (திர்மிதீ)

அழுக்கு படிந்த ஆடையை அணிந்திருந்த ஒருவரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தனது ஆடையைத் துவைப்பதற்கு எதுவும் இல்லையா? என்று கடிந்து கொண்டார்கள். (மிஷ்காத்) ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தொழுகையைக் கடமையாக்கியது மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுக்கு முன்பும் உளு எனும் கை, முகம், கால்களைக் கழுவும் முறையையும் கட்டாயமாக்கியிருக்கிறது, இஸ்லாம். பல் துலக்கும் கலாச்சாரத்தை கடமையாக்காத குறையாக வலியுறுத்தியுள்ளது.

மக்களுக்கு சிரமமில்லையானால் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குவதை கட்டாயமாக்கியிருப்பேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் போதித்தார்கள். பல் துலக்குவது வாயைச் சுத்தப்படுத்தவது மட்டுமல்ல; இறைப் பொருத்தத்தையும் தேடித்தரும் என்று நபியவர்கள் கூறி அதையும் இறைவழிபாட்டின் வரிசையில் இணைத்தார்கள். (புகாரி - 1933)

சாப்பாட்டுக்கு முன்பு கை கழுவிக்கொள்ள வேண்டுமென்பதும் இஸ்லாம் போதிக்கும் சுகாதாரக் கொள்கைகளில் ஒன்று. உணவருந்தும் முன்பும் பின்பும் கைகழுவிக் கொள்வது சாப்பாட்டில் அபிவிருத்தியை உண்டாக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத் - 3763)

நகஇடுக்குகளில் அழுக்கு படிவதால் அது உணவருந்தும் போது அழுக்கும் உடலுக்குள் சென்று உடல்நலத்ததைக் கெடுக்கக் கூடும். எனவே, இது போன்ற காரியங்களிலும் இஸ்லாம் கவனம் செலுத்தியிருக்கிறது. நகத்தை வெட்டுவதையும் இடுக்குகளில் உள்ள முடிகளைக் கலைவைதையும் மனிதனுடைய இயல்பான காரியங்களில் உள்ளவை என்று கூறி நபியவர்கள் உடல் சுத்தத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தியுள்ளார்கள். நாற்பது நாட்களுக்கு அதிகமாக அவற்றை அகற்றாமல் விட்டுவைக்கக்கூடாது, என்று காலக்கெடுவையும் கண்டிப்புடன் கூறியுள்ளார்கள். (திர்மிதி - 2758)

தண்ணீர் பாத்திரத்தை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பையைக் கட்டி வையுங்கள். தூங்கிவிழித்தால் தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் அவனுயை கரங்கள் (அசூசையான இடங்களில்) உலாவிஇருப்பதை அவன் அறியமாட்டான் என்று கூறி தண்ணீரின் தூய்மையைப் பேணுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள், நபியவர்கள். நாகரிகம் தெரியாத அந்தக் காலத்திலேயே அதிகமாக செருப்பணியுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (ஸஹிஹ் முஸ்லிம்)

செருப்பின் மூலம் கிருமிகளின் தாக்கத்தை விட்டும் பாதுகாப்புப் பெற முடியும். தண்ணீரில் நாய் வாய் வைத்துவிட்டால் அந்த பாத்திரத்தை ஏழுமுறை கழுவுங்கள். ஒரு முறை மண்ணால் தேய்த்து கழுவுங்கள். இவையனைத்தும் இறைத்தூதர் போதிக்கும் சுக ஆதாரங்களில் சில.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள் :- 02 -04- 20.