Tuesday, 8 May 2018

சிரியா-வரலாறும் படிப்பினையும் (பகுதி-02)


✍சே.ச.அனிப் முஸ்லிமின்

ஹஃபீஸ் அஸ்ஸாத் ஒரு பார்வை:

இவர் 1930’ல் பிறந்தார் இவரை பற்றி எங்கு தேடினாலும் இவர் சிரியாவின் அலவிய பிரிவை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது ஆனால் இவர்
உண்மையில் சிரியாவின் மிக வழிகெட்ட பிரிவான நுசைரிய பிரிவை சார்ந்தவர். இவர்கள் சியாக்களின் 11 ஆவது இமாம் ஹசன் அல் அஸ்கரியின்
மாணவர் இப்னு நுசைர் என்பவரின் வம்சத்தினர் என அறியப்பட்டவர்கள். இவர்கள் சிரியாவில் வந்தோடிகளாக கருதப்பட்டனர். இவர் படிப்பால் ஒரு விமான
ஓட்டுனர். கம்யுனிஸ்ட் மீது கொண்ட பிடிப்பால் 26 வயதில் பாத் கட்சியில் இனைந்தார். சிரிய மற்றும் எகிப்திய ஐக்கிய அரபு குடியரசு ஆட்சியில் மீண்டும் பாத்
கட்சியை ஜதீத் மற்றும் அம்ரான் ஆகியோருடன் சேர்ந்து உயிரூட்டினார். 1963ல் பாத் கட்சி ஆட்சியில் இராணுவ அதிகாரியானார் பின் இராணுவத்தை வைத்தே 1971ல் ஆட்சியை கைப்பற்றினார்.

சிரியா 74 சதவீதம் சன்னி முஸ்லீம்கள் வாழும் நாடு. இந்த நாட்டில் பாத் கட்சியினரின் கொள்கை மற்றும் ஆட்சியதிகாரத்தை 1970 களில் இருந்தே சிலர் எதிர்த்தே
வந்துள்ளனர். பாத் கட்சியினர் பொதுவாக எந்த மதத்தையும் சாராமல் மேலைநாட்டு கலாச்சாரத்தோடு ஒட்டிய கொள்கையை கொண்டவர்கள். இஸ்லாமிய
வரைமுறைகள் அங்கு பின்பற்றும் சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டது. மக்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது போன்று அரசே மக்களை
திசை திருப்பியது. இதனால் இஸ்லாமிய கொள்கைகளை விரும்பம் முஸ்லீம்கள் அதை எதிர்க்கத் துவங்கினர்.

எப்போதெல்லாம் எதிர்ப்பு கிளம்பியதோ அப்போதெல்லாம் எதிர்ப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது ஆஸ்சாத் அரசு. இத்தனை ஆண்டுகளில் ஒரு
எதிர் கட்சியும் இல்லை. ஆளும் வர்கத்தினருக்கு எதிராக யாரும் வாய் திறக்க முடியாதவாறும், புதிதாக எந்த கட்சியும், அமைப்பும் அரசுக்கு எதிராக குரல்
கொடுக்கும் தலைவர்களும் இருக்கும் இடம் தெறியாமல் ஆக்கப்பட்டார்கள். இவர் 2000 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிர் இழந்தார்

பஸ்ஸார் அல் அஸ்ஸாத்:

ஹஃபீஸ் அஸ்ஸாத்யின் மரணத்திற்க்கு பின் அவரது மகன் பஸ்ஸார் அஸ்ஸாத் பதவிக்கு வந்தார். மிகவும் எதிர்பார்க்க பட்ட இவர் தனது தந்தையின் பாதையை
விட மிக மோசமான் பாதையில் பயணித்தார்.

இவரது மிக மோசமான நடவடிக்கைக்கு சான்றாக 2011 நவம்பர் 9ல் அரசுக்கு எதிராக போராடியவர்கள் சுமார் 3500 பேர் சிரிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
உலகம் மிக மோசமான சர்வாதிகாரத்தை பார்த்தது.250 பேர் 2 வயதே ஆன குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர். அதே போல் வரலாற்றில
இன்னொறு ஹாமா படுகொலை கடந்த 2012 ஜுலை 12ல் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இவர்கள் ஆஸ்ஸாத்தின்
புதிய அரசியல் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவாகள்.மேலும் 11 வயதே நிறம்பிய சிறுமிகள் கூட வன்புணரப்பட்ட கொடுமைகளை அரசே நடத்தியது. இணையதளம்
உள்ளிட்ட ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள், யாரும் சுதந்திரமாக ஒரு மெயில் கூட அனுப்ப முடியாத, ஒரு பிளாக் கூட நடத்த முடியாமல் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட இணையதளசேவைகள் ஒட்டு மொத்தமாக முடக்கியது போன்ற ஊடக அடக்குமுறையையும் இந்த அரசு விட்டுவைக்கவில்லை. தனது அரசின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் அலாவி இன சியாக்களை அமர்த்தி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டதோடு எந்த மனிதாபிமானத் தன்மையும் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

சிரிய விடுதலை போர்:

கடந்த 29 ஜுலை 2011ல் ரயீத் அல் அஸ்ஸாத் உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகள் சேர்ந்து சிரிய விடுதலை இராணுவத்தை உருவாக்கினார்கள். இவர்கள் இந்த
அறிவிப்பை இணையதளம் மூலம் வெளியிட்டனர். வெல்வது அல்லது சாவது என்ற முழக்கத்துடன் துவக்கப்பட்ட இந்த படை சிரியாவின் மாற்றத்தை நோக்கிய
போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வருகிறது.

கடந்த காலங்களில் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்தே சிரியாவிலும் கடந்த மார்ச் 11, 2011ல் போராட்டம் துவக்கப்பட்டது. போராட்டக்காரர்களை அடக்க ஏப்ரல் 2011ல் அதிபர் பஸ்ஸார் உத்தரவின் பேரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த அடக்குமுறை சுமார் ஒரு மாதகாலம் நடைபெற்று வந்தது. அதன் விளைவே சிரிய விடுதலை இராணுவத் துவக்கத்திற்கு காரணமாகும். போராட்டக் காரர்கள் அரசு இராணுவ ஆயுதங்களை கைப்பற்றி
இராணுவத்திற்கு எதிராக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சிரிய விடுதலை இராணுவத்திற்கு உலகம் முழுதும் ஆதரவு பெருகியுள்ளது, ஈரான், ரஸ்யா, சீனா
மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகள் மட்டும்தான் சிரிய அரசை ஆதரித்து வருகின்றது. மற்ற யு.எஸ், யு.கே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளும் சிரிய விடுதலை படைக்கு ஆதரவளித்து வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் திருப்பம்:

இந்த விடுதலைப் போரில் இனைந்த சில வீரர்கள் பின்பு தனியாக ஒரு பிரிவை தொடங்கினர் பின்னர் அவர்கள் கிலாபத்தை அறிவித்தனர் . இதன் விளைவாக இவர்களாது கிலாபத்தை எற்றுக்கொள்ளாத சிரிய விடுதலை இராணுவத்தையும் இவர்கள் தாக்கவும் கொல்லவும் ஆரம்பித்தனர். இதனால் சிரிய விடுதலை மிக பெரிய பின் அடைவை கண்டு நிற்கிறது.

நிகழ்வின் சாட்சியங்கள்:

1. 2011 ஆம் ஆண்டில் மார்ச் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட உள்நாட்டு புரட்சியில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2,40,381 ஆகும்.

2.கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 111624 ஆகும்.

3.கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11964 ஆகும்

4.கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7719 ஆகும்.

5.போரில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை 30000 ஆகும்

6.போரில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஆகும்.

7.ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20000 ஆகும் .

8.போரினால் காயமுற்று நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் அதாவது 2 மில்லியன் மக்கள் ஆவர் .

9.போரினால் அருகே புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் பேர் அதாவது 7 மில்லியன் மக்கள் ஆவர்

10. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பித்து ஓடி வந்து பிற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் பேர் அதாவது 4 மில்லியன் என்பது மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

உணவிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகள்:

1. அகதிகளுக்கு உணவு வழங்கும் நிலைமைகள் நாளடைவில் குறைந்து வருகின்றது . நிதிப்பற்றாக்குறையின் காரணமாக உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க பணம் இல்லாமையால் முகாம்களுக்கு வெளியே உள்ள 229000 அகதிகள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

2.இதன் விளைவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு வேலைக்கு செல்வதும், பணங்களை வசூலிக்க வெளியே செல்வதும் அதிகரித்து வருகின்றது .

3.இதன் படி ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கூற்று படி முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 210000 ஆவர்.

4.முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆவர். இது வரை 1,772,535 சிரியா அகதிகளை துருக்கி வரவேற்று உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன .

அகதிகளை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்துவ மிஷன்ஸ்:

1.அகதிகளாக வருபவர்கள் பலரையும் கிறிஸ்துவ மதத்திற்கு திருப்பும் பணிகளை அபாரமாக செய்து வருகின்றது ஐரோப்பிய நாடுகள் .

2.இதில் சில இரானிய முஸ்லிம்கள் ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் உள்ள சர்ச்களில் கிறிஸ்துவத்தை தழுவுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளை விரிவாக வழங்கி உள்ளது .

3.சிலர் வாழ்க்கை மேம்பட்டிற்காகவும் மற்றும் ஐரோப்பிய குடியுரிமைக்காகவும் மாறி இருக்கலாம் அல்லது மாற்றப்படுவதாக ஊடகத்திற்கு செய்திகள் திட்டமிடப் படலாம் என்பது எனது பார்வை.

4..செய்திகளில் குறிப்பிட்டவர்கள் இரான் மற்றும் ஆப்கான் நாட்டின் அகதிகள் என அறிய முடிகின்றது. அவர்கள் உண்மை நிலவரம் என்ன என்பதை மேற்கத்திய ஊடகம் தரும் செய்தியை மட்டும் வைத்து கள ஆய்வு இன்றி தீர்க்கமாக முடிவு செய்து விட முடியாது.

5.அகதிகளாக வரும் பலரும் மதம் மாறவில்லை என்பது டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளில் வரும் சில தகவல்களை வைத்து அறிய முடிகின்றது.

6.ஐரோப்பிய நாடுகள் அகதிகளை வரவேற்கின்ற காரணங்கள் கிறிஸ்துவ அழைப்பிற்கு என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

ஸ்வீடன் செல்லும் வழியில் கற்பழிக்கப்படும் குழந்தை அகதிகள்:*

1.தஞ்சம் புகுவதற்கு ஆதரவு தேடும் சிறுவர் சிறுமிகள் 92 % சதவிகிதம் பேர். அவர்கள் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஆவர் .

2.பெற்றோர்கள் இன்றி அகதிகளாக ஸ்வீடன் வரும் குழந்தைகள் வாரம் தோறும் சுமார் 700 பேர் வருகை தருகின்றனர். அகதிகளாக வரும் குழந்தைகள் கடத்தல்காரர்களால் கற்பழிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உடல் ரீதியான மற்றும் மனம் ரீதியான காயங்களுக்கு ஆளாகின்றனர்.

3.அகதிகளாக வரும் குழந்தைகள் பலரும் எலும்புகள் முறிந்த நிலையிலும் , தலையில் தாக்கப்பட்டு காயங்களுடனும் வருகின்றனர். நாடு கடத்தபப்டும் குழந்தைகள் பண்டமாற்றுவண்டிகளில் அழைத்து வரும் போது விழுவதாகவும் , குழந்தைகள் கனனத்தில் அறைந்து காத்து கேட்கும் தன்மை இழப்பதாகவும் செய்திக் குழுக்கள் தகவல் அழிப்பது வேதனையாக இருக்கின்றன .

4.இவர்களுக்கு மனம் ரீதியாக தைரியம் ஊட்டும் மக்களும் பாதுகாப்பு அளிக்கும் மனிதநேய குழுக்களும் உடனடி தேவையாக இருக்கின்றது.

தொடரும்….இன்ஷா அல்லாஹ்….

No comments:

Post a Comment