Tuesday, 20 March 2018

ஜகரிய்யா (அலை) வாழ்க்கை வரலாறு - 7


ஜக்கரிய்யா (அலை) அவர்களிடமிருந்து 6 துவா உத்திகள்

(அல் குர்’ஆன் 19:1-3]

1. நிதா’- இதன் பொருள், தவிப்புடனும், தேவையுடனும் அழைத்துக் கேட்பது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலைகளில் நாம் இப்படித்தான் நாம் நேசிப்பவர்களை அழைப்போம். உதாரணமாக, ஒரு தாய் வெளிநாட்டுக்குச் செல்லும் தன் ஒரே மகனை வழியனுப்பும்போது, பாதுகாப்பாக இருக்கும்படியும், அவனுடைய உடல்நலத்தைப் பற்றி தனக்கு அடிக்கடி தெரிவிக்கும்படியும் வேண்டிக்கொள்வாள். இன்னொரு உதாரணம், ஒரு சூடான சண்டைக்குப் பின் உங்கள் அன்பான துணைவர் உங்களை விட்டு போகப்போகிறார், அப்போது, தவிப்புடன், “தயவு செய்து போகாதீர்கள்!” என கதறுவீர்கள். இதைப் போன்ற உணர்வு தான் ‘நிதா’ என்ற சொல்லில் உள்ளது, மேலும், நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் அதைத் தான் கொண்டு வர வேண்டும்.

2. ஹாஃபிய்யா – அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யா (அலை) மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவனை அவர் தனிமையில் தாழ்ந்த குரலில் கேட்டது இந்த உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம். தன்னுடைய அதிபதி எங்கிருந்தாலும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யாவுடைய இந்த உறுதி, வானவர்கள் அவரிடம் வந்து அல்லாஹ் அவருடைய துவாவை ஏற்றுக் கொண்ட நற்செய்தியைக் கூறியபோது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. வானவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக அவர் அல்லாஹ்வுக்கு நேரடியாக பதிலளிக்கிறார்.

மேலும், அல்லாஹ்வைத் தனிமையில் பிரார்த்திப்பது நாம் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக அல்லது ரியா என்ற பாவத்திலிருந்து நம்மைக் காக்கும்.

(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! … [அல் குர்’ஆன் 19:4-5]

3. அவர் துவாவைத் தொடங்கும் முறையைப் பாருங்கள். தனக்கு வேண்டியதை நேரடியாக அவர் கேட்கவில்லை. மாறாக, தன்னுடைய பிரச்சினைகளை விளக்குகிறார், அல்லாஹ்விடம் தன் பயங்களையும், கவலைகளையும் கூறுகிறார்.

4. ரப்பீ – என்னுடைய அதிபதியே, அன்பு மற்றும் நெருக்கமாக அல்லாஹ் அஸ்ஸவஜலை அழைக்கும் முறை – ரப்புக்கும், அடிமை (அப்து)க்கும் உள்ள உறவைக் காட்டுகிறது.

ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக! [அல் குர்’ஆன் 19:5-6]

5. துவாவுடைய காரணத்தை விளக்குவது: தன் மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ்வுடைய தீன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

6. ‘யாகூப் (அலை) அவர்களுடைய குடும்பத்திற்கும்’ – அவருடைய வார்த்தைகளில் அவர் எத்தனை கவனமாக இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள் – யாகூப் (அலை) அவர்களின் சந்ததிகளில் எல்லோரும் வாரிசாவதற்கு தகுதியானவர்களாக இல்லை. அவர்களில் சிலர் தீயவர்களாகவும் இருந்தார்கள்.

ஜகரிய்யா நபியின் வரலாறு முடிவுற்றது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 21-03-2018.

No comments:

Post a Comment