Saturday, 30 December 2017

கண் விழிப்போம்!


இந்திய இஸ்லாமியர் மிகக்குறிப்பாக
தமிழக இஸ்லாமியர் நாம்,
இனியாவது கண் விழிப்போம்!

ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களுக்கும் வாழ்விருந்தும் வாழா வெட்டியாக
தம்மை தாமே புறந்தள்ளி வைத்திருப்பது துரதிஷ்டமே.

அல்ஹாஜ் ஷஹீத் பழநி பாபா அஹ்மத் அலி அவர்களால் அறிவுப்பூர்வமாக ஆக்கப்பூர்வமாக புள்ளி விவரம் திரட்டப்பட்டு மேடையெங்கும் முழங்கியுங்கூட, அன்றும்
இஸ்லாமிய சமுதாயம் தூங்க் கொண்டிருந்தது!
இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

இதோ படியுங்கள்!

தமிழக முஸ்லிம்களின் தொகுதி பலம்:-
------------------------------------------
தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

 தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.

அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கோயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தியப் பகுதி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை கடற்கரை
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எழும்பூர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.

இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 100 சட்டமன்றத் தொகுதிகளிலும், 16 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

அன்பு சகோதரர்களே !... 
மேற்காணும் உண்மை நிலையையும் , புள்ளி விபரங்களையும் படித்து சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழையும் சமுதாயத்தை என்னன்பது சகோதரர்களே!

தீனை பிரித்து, ஆயிரம் இயக்கமாக இருந்து விட்டு போ. ஆனால் அரசியல் என்று வரும் போது சுயேட்சையாக இருந்தாலும் இயக்க தலைகள் கூடி பேசி ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஓட்டுக்களையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது ஒவ்வொரு இஸ்லாமிய தலைவர்களின் கடமை.

பழநி பாபா:- மாவீரன் அல்ஹாஜ் பழனி பாபா அவர்களின் ஆசைகள்...!

பழனிபாபா அவர்கள் நம் சமூகத்தை பாதுகாக்க சொன்ன வழிகள்//

1.  ஒரு பள்ளிவாசல் மொஹல்லா (பகுதி) யில் உள்ள சமூக உணர்வு உள்ள 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்

ஒரு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளது

நம் சமூத்தினருக்கு ஒரு பிரட்சனை  என்றால் ஒரு பள்ளிவாசல் முஹல்லாவிற்கு ஒரு கார் வீதம் 100 பள்ளிவாசல்களுக்கும்
100 கார்களுடன் 1000 நபர்கள் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டால்
அந்த மாவட்ட ஆட்சியர்
உங்கள் பிரச்சனையை உடனே தீர்த்து வைப்பார்!

இவ்வாறு நீங்கள் செயல்பட்டால் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்
எந்த எதிரிகள் தாக்குதலும் ஏற்படாது!
( பள்ளிவாசல் நிர்வாகத்திலோ அல்லது மார்க்க விஷயத்திலோ தலையிட கூடாது மார்க்க அறிஞர்களுக்கு ஜமாத்துக்கு காவலாளியாக இருக்க வேண்டும் )

2. நம் சமுதாய விழிப்புணர்வு அடைய சிறந்த பேச்சாளரை உருவாக்குங்கள்
அந்த பேச்சாளர் நம் நாட்டில் முன்னோர்கள் நாட்டிற்கு செய்த தியாகம் , மற்றும் அரசியல் உட்பட அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்!

3. நம் சமுதாய இளைஞர்கள்
ஆயுதம் ஏந்தி போராடுவதோ,
நடிகர் சங்கம் பின்னால் போவதோ தவிர்த்து
மக்கள் பிரச்சனைக்கு போராட தயார்படுத்தனும்!

4.  தேர்தலில் முஸ்லிம்கள் தனித்து நின்று ஒருமுறையாவது தன்னுடைய அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டும்!

5.   எல்லா மாவட்டத்திலும்
குறைந்த பட்சம் ஒரு வழக்கறிஞராவது உருவாக்க வேண்டும்!
 அந்த வழக்கறிஞர் நம் பிரச்சனைகளுக்கு முன்னின்று வாதாடுபவராக
இருக்க வேண்டும்!

பாபாவின் கனவை நினைவாக்க,

பாபா விட்டு சென்ற பணியை தொடர,

சமுதாயத்தை வழிநடத்த,

நல்ல தலைவர் கிடைக்க
அல்லாஹ் விடம் துஆ செய்வோம்!

சிந்திப்பீர்!

தமிழ்நாட்டில் 30 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் 12000 பள்ளிவாசல்கள் உள்ளது!

ஒரு பள்ளிவாசல் மொகல்லாவிற்கு
10 பேர் வீதம் 12,000 பள்ளிவாசலுக்கு 1,20,000 பேர் நிர்வாகிகளாக இருப்போம்!

இந்த 1,20,000 பேர்
ஒரு தலைமையின் கீழ் உறுவாகுமேயானால்
1000 வாகனங்களுடன்
சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டால்...
சிறைவாசிகளின் விடுதலைக்கு
தீர்வு மட்டும் அல்லாமல்
1கோடி முஸ்லிம்களுக்கு
விடிவுகாலம் பிறக்கும்!

பதிவு உதவி:
சகோ. Nowshad Ali Khan Politician

நன்றி இணையம்....

No comments:

Post a Comment