அழியாத அத்தாட்சி
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். (அல்குர்ஆன்: 10:92,93)
கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். திருக்குர்ஆன் கூறும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷுரா நாள் என்றாலே ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டு விட்டதே!
எல்லாம் வல்ல ரஹ்மானின் அருட்கொடைகளையும், ஆற்றலையும் கடந்து போன அந்த சமுதாயத்தின் தியாக வரலாற்றிலிருந்து உணர்ந்து ஏகத்துவச் சிந்தனையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய நம் சமுதாயம், அதைக் கண்டு கொள்ளாமல் கர்பலாவின் பெயரையும், பஞ்சா போன்ற அனாச்சாரங்களையும் உரத்துச்சொல்லி கைசேதப்பட்டு நிற்கிறது. அல்லாஹ் காப்பானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.......
பதிவு நாள்: 26-12-2017
No comments:
Post a Comment