ஈஸா நபி போதித்த ஓரிறைக் கொள்கை:-
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)
ஈஸா நபியின் சீடர்களும் முஸ்லிம்களே:
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
(யூதர்களாகிய) அவர்களிடம் இறை மறுப்பை ஈஸா நபி உணர்ந்த போது அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என்று கேட்டார். அதற்கு ஹவாரிய்யூன் (எனும் அவரது சீடர்கள்) நாங்கள் அல்லாஹ்வின் உதவி யாளர்கள். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் மேலும் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக இருப்பீராக என்று கூறினர். (3:52, 5:111)
அல்லாஹ்வின் உத்தரவுப் படி ஈஸா நபி காட்டிய அற்புதங்கள்:-
وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நிச்சயமாக நான் உங்களுக்கு உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத் தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண் ணால் ஒருபறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி அதில் ஊது வேன். உடனே அல்லாஹ் வின் அனுமதி கொண்டு அது (உயிருள்ள) பறவையாகி விடும். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குரு டரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் இறந்தோரையும் உயிர்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றையும் உங்க ளுக்குக் அறிவிப்பேன். நீங்கள் விசுவாசம் கொணடவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி உள்ளது (என்றார் ஈஸா நபி). (3:49, 5:110-114)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 05-12-2017.
No comments:
Post a Comment