Monday, 11 December 2017

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-11


சத்தியத்தை நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் விடுக்கும் சவால்:

الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ

இவ்வுண்மை உமது இரட்சகனிடமிருந்து வந்ததாகும். ஆகவே சந்தேகம் கொள்வோரில் நீர் ஆகிவிட வேண்டாம்.(நபியே) உம்மிடம் அறிவு வந்த பின்னரும் அவர் விடயத்தில் யாரும் உம்மிடம் தர்க்கித்தால் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் நாம் அழைத்து பின்னர் நாம் அழிவு சத்தியம் செய்து அல்லாஹ்வின் சாபத்தை பொய்யர்கள் மீதாக்குவோம் எனக் கூறுவீராக. நிச்சயமாக இது தான் உண்மையான சரித்திரமாகும்.(உண்மையில்) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன். அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிவான். (3:61;62)

ஈஸா நபியின் மரணம்

(உயிரோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி உலக அழிவுக்கு முன் மீண்டும் பூமிக்கு வருவார். முஹம்மது நபியின் இஸ்லாமிய போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்துவார். அவரை நிராகரித்த யூதர்கள் உட்பட மக்கள் அனைவரும் விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாவார்கள். பூமியிலே இயற்கை மரணம் எய்துவார். அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்வார்கள் என நபி முஹம்மத் (ஸல்) கூறினார்கள் என்பதை ஹதீஸில்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர் முடிவுற்றது.

பதிவு நாள்: 11-12-2017.

No comments:

Post a Comment