யூதர்கள், கிறிஸ்தவர்கள்,
இஸ்லாம், இப்படி பல அனைத்து மத பிரிவுகளுக்கும் இஸ்ரேல் எனப்படும் பாலஸ்தீனத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் என்பது பொதுவுடமை இது அனைவருக்கும் பொதுவானது,
ஆனால் அங்கு பிரச்சனை நடந்து கொண்டு இருப்பது என்னவென்றால் அல் அக்ஸா பள்ளிவாசல் யூதர்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள்,
அதே போல் அங்கு கிறிஸ்தவர்களும் தனி பிரிவுகளாக இருக்கிறார்கள்,
ஆனால் இஸ்லாமியர்கள் பொதுவுடமை என்கிறார்கள்.
அல்அக்ஸா பள்ளிவாசலில் அனைவரும் ஒன்றினையாமல்
எப்படி பிரிந்து கிடைக்கிறார்கள்,
அதற்கு என்ன காரணம் என்பது ஒரு சிறு யூகங்களாக
இந்த பகுதியல் படிக்கலாம்,
மனிதர்களாகிய
நாம் பல பிரிவுகளாக கருத்துக்கள் அடிப்படையில் பிரிந்து கிடைக்கிறோம்,
உதாரணமாக ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் மூன்று நபர்கள்.
ஒரு குடும்பத்தில் தந்தை, தாய்,
பிள்ளை,
இவர்கள் மூன்று நபர்களும்
ஒரே எண்ணங்கள் கொண்டு இருக்கமாட்டார்கள்,
அவர்களுக்கென்று தனி தனி கருத்து வேறுபாடுகள், தனித்தனி ஆசைகள்,
இந்த கருத்து வேறுபாடுகள் ஆசைகள்,
நம் எண்ணங்களில் கலந்து இருப்பதால்தான் இன்று பிரிந்து கிடக்கும் நம் மனிதர்கள் அனைவரும்,
வாழ்நாள் முழுவதும்
ஒரு குடும்பத்தில் இதே போல் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருந்தால் என்ன ஆகும்?
தாய்,தந்தை ,மகன்,என்ற உறவு முறை எண்ணங்களுக்கு தெரியாமல் போய் விடும்,
தந்தை மகனோடு சண்டை போடுவது, மகன் தாயோடு சண்டை போடுவது,
மனைவி கணவனோடு சண்டை போடுவது, கணவன் மனைவியோடு சண்டை போடுவது, பிள்ளை பெற்றோர்களுடன் சண்டை போடுவது, ஆக இந்த
சண்டை என்பது எதன் அடிப்படையில் உருவாகுவது என்றால்
கருத்துக்கள் அடிப்படையில் தான்,
ஆக இந்த குடும்பத்தை எப்படி ஒன்று இணைப்பது?
எப்படி ஒன்று இணைக்க முடியும்?
(1)ஆக இந்த குடும்பம் ஒன்றினைய பொதுவானது என்ற ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்,
அந்த பொதுவானது காலம் முழுவதும் அழியாமல் இருக்க வேண்டும், ஏன் என்றால் இந்த குடும்பத்தின் பிள்ளைகளின் வருங்கால சந்ததிகளுக்கும் அது பொதுவானதாகவே இருக்க வேண்டும், அந்த பொதுவானது மாற்றமடையாமல் அது போலவே இருக்க வேண்டும்,
(2)அப்படி பொதுவானது என்று
ஒன்று மட்டும் தான் இருக்க வேண்டும்,
(3)அந்த பொதுவானது மூன்று நபர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும், குறிப்பிட்டு இவருக்கு மட்டும்தான் உரியது என்றும் மற்றவர்களுக்கு உரியது இல்லை என்று இருக்க கூடாது.
இந்த குடும்பத்தின் வருங்கால சந்ததிகளுக்கும்
அவர்களில் இருந்து உருவாகும் அனைத்து சந்ததிகளுக்கும் ஒரே பொதுவுடமையாக இருக்க வேண்டும்,
(4)ஆக ஒரு குடும்பத்தில் ஒன்றினைய பொதுவான ஒன்றை தேர்ந்தெடுத்த பிறகு
மீண்டும் கருத்து வேறுபாடுகள் வந்தால்
மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
மீண்டும் மீண்டும் இந்த கருத்து வேறுபாடுகள் வந்து கொண்டே இருக்குமேயானால் மீண்டும் அந்த பொதுவான ஒன்றையே நாட வேண்டும்,
(4)அந்த குடும்பத்தில் உள்ள மூன்றில் ஒரு நபர் அந்த பொதுவானதை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்?
அவர் ஒன்றினைய வேண்டாம் என்ற அடிப்படையிலேயே இருந்தால் என்ன ஆகும்?
ஆக மீண்டும் சண்டை தான் ஏற்படும். கருத்து வேறுபாடுகள் அடிப்படையில் பிரிவுதான் ஏற்படும்,
சரி என்பது தவறாகவும், தவறு என்பது சரியாகவும் இருக்கும், அந்த பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்க மணம் இல்லாமல் இருத்தால் இரக்கம் குணம் இருக்காது,
இதனால் தான் திருட்டு, கொலை,கொள்ளை என்று இயற்கைக்கு எதிராக இந்த எண்ணங்கள் கொண்டு போய் சேர்க்கும்,
(5)மனிதர்களுக்கு கருத்து வேறுபாடுகள் என்பது அவர்வர் இரத்தத்திலேயே கலந்துள்ளது, அதை மாற்ற முடியாத ஒன்று, ஆக ஒரே எண்ணங்கள் அடிப்படையில் மனிதர்களுக்கு இருக்காது,
ஆக வேறு வழி என்றால் பொதுவான அடிப்படையில் ஒன்றினைய வேண்டும்,
அப்படி அந்த பொதுவான ஒன்றை ஏற்க மறுத்தால் பல குழப்பங்கள் ஏற்படும்,
(6)உதாரணமாக ஒன்றினைய வேண்டும் என்பவர்கள் பார்வை உடையவர்களாகவும், சற்று சிந்திப்பவர்களாவும் இருப்பார்கள்,
(7)ஒன்றினைய வேண்டாம் என்பவர்கள் குருடர்களாவும்,
அவர்கள் செய்வது அனைத்தும் சரி ,
என்றது போல் இவர்களால் குழப்பங்கள் ஏற்படும், பிரிவுகள் ஏற்படுத்தும்,
பல பிரிவுகளை ஏற்படுத்துவார்கள்,
அதன் மூலம் தான் தேவையற்ற செயல்கள் ஏற்படும்,
ஆக இந்த குடும்பத்தின் சந்ததிகள்
இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள்,
(1)அந்த இரண்டில் ஒன்று பொதுவானதை தேர்ந்தெடுத்த சந்ததிகள்
ஒன்றினைகிறார்கள்,
(2)பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கா சந்ததிகள் ஒன்றுபடாமல் பல பிரிவுகளை ஏற்படுத்துகிறார்கள், இவர்களால் மீண்டும் பல குழுப்பங்கள்
ஏற்படுகிறது,
அந்த பல பிரிவுகளால் தான் பல குழப்பங்களுடன் சேர்ந்து இயற்கைக்கு எதிராக திருட்டு பாலியல், கொலை,
கொள்ளை, இது போல் பல அநாச்சாரங்கள் ஏற்படும்,
மேலே சொல்லப்பட்ட குடும்பம் என்பதை நாடாக வைத்து கொள்ளுங்கள், ஒரு குடும்பம் என்பதுதான் நாடு, இந்த நாடு தான் உலகம்,
இன்று ஒவ்வொரு நாட்டிலும்
இயற்கைக்கு எதிராக இருக்கும் செயல்கள் அனைத்தும் இந்த பிரிவுகளால் தான்,
மனிதர்களுக்கு பொதுவானது என்பது
கடவுள்
இந்த கடவுள் என்பதால் தான் மனிதர்கள் சற்று ஒன்றினைந்து இருக்கின்றார்கள், வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்,
மனிதர்கள் எப்படி கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடவுள் என்ற அடிப்படையில் ஒன்றினைவதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், ஆனால் இங்கு கடவுள் என்பதே பிரச்சனை
எந்த கடவுள்?எத்தனை கடவுள்? கடவுளையே பல பிரிவுகளாக பிரித்துவிட்டார்கள்,
இந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக எப்படி பிரிந்தது, எதனால் பிரிவடைந்தது என்பதை மேலே சொல்லப்பட்டதை சற்று சிந்தித்து படித்தால் புரியும்,
ஆக இன்னும் அவர்கள் பொதுவான ஒன்றை தேர்ந்தெடுக்கவில்லை என்பது தான் உண்மை...
யூதம்,கிறிஸ்தவம்,இஸ்லாம்,இந்து,இப்படி பல பிரிவுகளாக இருக்கும் மனிதர்கள் ஒன்றினைய
ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது.
மனிதர்கள் ஒன்றினைய கடவுள் என்ற ஒன்றில் மட்டுமே ஒன்றினைய முடியும்,
அந்த கடவுள் என்பதை பல பிரிவுகளாக பிரிக்காதீர்கள்,
அப்படி பிரித்தால் அது பொதுவுடமை இல்லை,
இந்த பொதுவுடமையை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மனிதர்களின் எண்ணங்களில்தான் உள்ளது,
சிந்தித்து பாருங்கள் எது பொதுவுடைமை என்பதை...
அந்த பொதுவுடைமையான பகுக்க முடியாத பகவனை தேர்ந்தெடுத்து ஒன்றினையுங்கள்,
அப்போது தான் எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாளும் சகோதர்களாகவும்,
அவர்களுக்கு சாந்தியும்
சமாதானமும்,அமைதியும் ஏற்படும்..
இன்ஷா அல்லா இதன் தொடர்ச்சி அடுத்த மாத இதழில் படிக்கலாம்....
No comments:
Post a Comment