Sunday, 4 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் -9🌙

நோன்பு - 09


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

========================

*பொருளாதாரத்தில் சமத்துவ*
*உணர்வைத் தூண்டிடும் நோன்பு!*

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்து விட்ட வரலாற்றில் 1415 ஆண்டுகளுக்கு முன் ஏற்றத்தாழ்வற்ற பொருளாதார
உணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க
முதல் முதலாக உலகளாவிய சட்டம்
ஒன்று இஸ்லாமிய சமுதாயத்தவருக்கு
பிரகடனமாகிறது. அதுதான் ரமளான்
மாதம் முழுதும் நோன்பு வையுங்கள்
என்பது. தொடர்ந்து அதேயாண்டில்
ஜகாத் எனும் சட்டம் கடமை ரீதியாக
அமலுக்கு வருகிறது. இவ்விரண்டும்
ஏறக்குறைய ஒரே
நோக்கத்திலிருந்ததால் அடுத்தடுத்து
கடமையாக்கப்பட்டன.

 1415 நாட்களாக உண்ணாமல் குடிக்காமல் தீமைகள் புரியாமல் மனதைக்
கட்டுப்படுத்தி, பகல் முழுதும் நோன்பிருந்து இரவு காலங்களில்
விழித்து வணங்கி, தங்களது பொருட்களை அடுத்த நண்பர்களுக்கு
பகிர்ந்தளித்து வரலாறு
படைத்துள்ளனர் முஸ்லிம்கள் என்பது
இதன் பொருளாகிறது !
இன்றுள்ள உலக மக்கள் தொகையில் 600 கோடியில் சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களது ஒரு மாத உண்ணா நோன்பு மூலம் பல லட்சம் டன்
உணவு தானியங்களை
மீதப்படுத்துகின்றன என்பது இதன்
அர்த்தமாகிறது.
இந்தியாவின் மக்கள் தொகையான 80
கோடியில் 25 கோடி முஸ்லிம்கள் தங்களது மீத உணவுப் பொருளை
அடுத்தவர்களுக்கு விட்டுக்
கொடுக்கின்றனர் என்று இதன் பொருள் !
மாற்றுமத நண்பர்களுக்காக தம்
உணவை விட்டுக் கொடுத்து தியாகம்
புரிகிறார்கள் என்பது இதன்
தத்துவமாகிறது !

தொலைக்காட்சிகள் ஒளி பரப்பிகள்
ஆடம்பரங்களையும், வீண் விரயங்களையும் நாளொரு மேனியுமாக பொழுதொரு
மேனியுமாக ஒளி பரப்பிக்
கொண்டிருக்கும் ஒளி பரப்பிகளும்,
தொலைக்காட்சிகளும், நோன்பின்
மாண்புகளையும், பலன்களையும்,
இஸ்லாமியரின் தியாக
உணர்வுகளையும் எடுத்துரைத்தால்
எத்துணைப் பலன் தரும்?

நோன்பின் மாண்புகள்
சமுதாய ரீதியில் மேற்கூறப்பட்ட
இத்தனை பலா பலன்கள் நோன்பின் மூலம்
கிடைக்கப்பெற்றாலும், நோன்பு
நோற்பதினால் நற்பண்புகள் பலவற்றை
தன்னுள் உருவாக்க பயிற்சி
பெறுகிறான் மனிதன்.

1.அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பு சகிப்புத் தன்மையில்
பாதியாகும்.
(நூல் : திர்மிதீ)
எனவே மனிதனுள் சகிப்புத் தன்மையை உண்டாக்கி
போராட்டங்களுக்கு முடிவு
கட்டுகிறது நோன்பு.
2. அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் : -
“ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசல்
உண்டு. உண்மையான பக்தியின் வாசல்
நோன்பாகும்”
(நூல் :
ஜாமிஉஸ்ஸகீர்)
எனவே போலியான பக்திகளை அகற்றி
உண்மையான பக்தியினை
உண்டாக்குகிறது நோன்பு.
3. அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் :
“மனிதனுள் ஷைத்தான் இரத்தம்
ஓடுமிடமெல்லாம் ஓடுகிறான்.
அவனை நோன்பைக் கொண்டு
ஒடுக்குங்கள்”
(நூல் : புகாரீ)
எனவே தீவிர வாதத்தை
ஒடுக்குகிறது நோன்பு.
4. அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் :-
“இந்த நோன்பு காதல்
வயப்பட்டவர்களுக்கு முறிவு மருந்தாகும்"
(நூல் : புஹாரி )
எனவே அனைத்து விதமான
இச்சைகளையும் அடக்கி விடுகிறது
நோன்பு.
5. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நிச்சயமாக இந்த நோன்பு காலக் கேடுகளை தடுக்கும்
கேடயமாகும்”
(நூல் :
ஜாமிஉஸ்ஸகீர்)
எனவே முஸீபத்துகளை
அகற்றுகிறது நோன்பு.
6. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பு நோற்று ஆரோக்கியம்
பெறுங்கள்”. (நூல் : ஹுல்யா)
எனவே உடல் ஆரோக்கியத்தையும்,
வலிமையையும் தருகிறது நோன்பு.
7. அண்ணல் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் :-
“ஒவ்வொன்றிற்கும் சுத்திகரிக்கும்
சாதனம் உண்டு. உடலை
சுத்திகரிப்பது நோன்பாகும்”.
(நூல் :பைஹகீ)
எனவே உடலை சுத்தப்படுத்தும்
கருவி தான் நோன்பு.
8. அண்ணம் நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பாளியின் வறட்சியில்
வெளியாகும் சதை
நாற்றாமாகிறது. இறைவனிடம் அது
கஸ்தூரி மணமாகக் கமழ்கிறது”.
(நூல் : தப்ரானீ)
9. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது பித்தம்
 நஞ்சு சம்பந்தப்பட்ட
 நோய்களை உடைத்து
விடுகிறது”.
(நூல் : தப்ரானீ)
எனவே பித்தம் சம்பந்தப்பட்ட
நோய்களுக்கு நிவாரணி தான்
நோன்பு.
10 அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது சதைகளின்
கொழுப்பை உருக்கி விடுகிறது”.
11. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பாகிறது உஷ்ணத்தால் வரும்
நோய்களை நீக்குகிறது”.
(நூல் : தப்ரானி)
எனவே உடற்பருமன் நோய்களை
நீக்குகிறது நோன்பு.
12. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“ஆசை வெறிகள் அடங்கிட எனது
உம்மத்தார்கள் நோன்பு வைப்பார்கள்”.
(நூல் தப்ரானீ)
எனவே வெறித் தனத்தை
ஒடுக்குகிறது நோன்பு.
13. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“நோன்பு நரகத்தின் கேடயமாகும்”.
(நூல் : திர்மிதீ)
எனவே நரகத்தின் பால் நோன்பாளி
செல்ல மாட்டான்.
14. அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறுகிறார்கள் :-
“ஆயிஷாவே ! பசியைக் கொண்டு
சொர்க்க வாசலைத் தட்டிக் கொண்டிரு”.
(நூல் :இஹ்யா)
எனவே நோன்பாளியின் நோன்பு
அவனுக்காக சொர்க்க வாசலைத்
தட்டுகிறது.
நோன்பின் பூரண நலம் பெற்று
வளமாய் வாழ்ந்திட வல்ல நாயன்
அனைவருக்கும் தெளஃபீக் செய்வானாக.

நன்றி :குர்ஆனின்  குரல் - ஜூலை 2013

(இன்ஷா அல்லாஹ் தொடரும்... )

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 05-06-2017

No comments:

Post a Comment