*ஜகாத் ஒரு எளிய அறிமுகம் தொடர் - 1
தமிழில் - ஹஸனீ*
_அன்புடையீர்_
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜகாத், இது ரமலான் காலங்களில் நாம் காதுகளில் அதிகமாக ரீங்காரமிடும் ஒரு வார்த்தை.
ஜகாத் என்பது தொழுகையை போன்று கடமையாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், நாம் ரமலானில் மட்டுமே அது பற்றி ஆலோசிக்கிறோம்.
பொதுவாக ஜகாத்தின் நோக்கத்தை இறைவன் கூறும் போது “ கை லா யகூன துவலத்தன் பைனல் அங்னியாஇ மின்கும் “ என்று கூறுகிறான்.
அதாவது “ உங்களின் பணக்கார்களுக்கு மத்தியில் மட்டும் அவை சுற்றிக்கொண்டிருக்காமல் இருப்பதற்காக”.
இன்னும் ஜகாத் பற்றி குர்ஆனில் இறைவன் 82 இடங்களில் தொழுகையோடு இணைத்து சொல்கிறான்.
இதிலிருந்து இறைவன் மனிதர்களிடம் நிலைநாட்ட விரும்பும் பொருளாதார கட்டமைப்பு விளங்குகிறது.
🏆ஆகையால், ஜகாத் என்பது கட்டாயம் கணக்கிட்டு கொடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
*❓எந்த பொருளில் ஜகாத் கொடுக்கவேண்டும்?*
*❓எவ்வளவு கொடுக்கவேண்டும்?*
*❓எவ்வாறு கணக்கிட வேண்டும்?*
*✅யாருக்கு கொடுக்கவேண்டும்?*
*❌யாருக்கு கொடுக்ககூடாது?*
என்ற தகவல்களை நம்மில் உள்ள அனைவர்களும் விளங்குவதற்காக இந்த சிறு முயற்சி.
சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதை பின்பற்றுகிற அறிவை இறைவன் தருவானாக.
அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதிலிருந்து தவிர்ந்திருக்கும் அறிவை இறைவன் தருவானாக.
பருவமடைந்த அறிவுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் பின்வரும் தகுதிகளை அடைந்தால் அவர் மீது ஜகாத் கடமையாக ஆகும்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 05-04-2017

No comments:
Post a Comment