நிம்மதியான வாழ்க்கை
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம்குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை)அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத்துணைவியாரையும், குழந்தையையும் விட்டுவிட்டு இருகரமேந்தி துஆ செய்துவிட்டு வந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவன மணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது. எங்கும் கானல் நீர்தான். பச்சிளங் குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள், குழந்தையின் பாதத்திலிருந்து உலகின்கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமை நாள்வரை வற்றாத ஜம் ஜம் எனும் நீரூற்றை
பேரற்புதத்தை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.உலகிலேயே புனிதம் நிறைந்தஒரு தண்ணீர் உண்டென்றால் அது ஜம் ஜம் தண்ணீர் மட்டும் தான். அதை பருகுபவர்களுக்கு மனநிம்மதியும், உடல்ஆரோக்கியமும், வலிமையும்தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதை இவ்வரலாறு உணர்த்துகிறது.
ஸபஃ சமுதயத்தினருக்கு அவர்கள் வசித்த இடத்திலேயேஒரு சான்று இருந்தது. வலப்பறமும், இடப்புறமும் (நீரோடைவழிந்தோடும்) இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள் உங்கள் இறைவன் வழங்கிய
ஆகாரத்தை!மேலும் நன்றி
செலுத்துங்கள். நாடோ நன்கு செழிப்பாக இருக்கிறது. படைத்த இறைவன் மன்னிப்பாளனாக இருக்கிறான். இரவு, பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்வாழுங்கள்.
மேற்கூறப்பட்ட இந்த இரு நிகழ்வுகளும் அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் மிக அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.
எனவே, தண்ணீர் என்பது மனித சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒர்அருட்கொடையாகும். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கோதண்ணீர் என்பது மாபெரும் அருட்கொடையாகும். ஏனெனில் தண்ணீர் பந்தம் மறுமையிலும்இறை நம்பிக்கையாளனோடு தொடர்கிறது.பல்வேறு சிறப்புகளையும், மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான மாபெரும் அருட்கொடை தான் தண்ணீர்.
மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம் சுவனத்தைப்
பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம் தண்ணீர் ஒலித் தொடும் நீரோடையையோ சுவனத்தின்முதற் பாக்கியமாக கூறுகின்றான்.
அவ்வளவு ஏன்?அல்லாஹ்வின் அரியாசணம் -அர்ஷ் கூட தண்ணீரின் மீது தான் அமைந்துள்ளதாக குர் ஆன்கூறுகின்றது.
இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டுள்ளது. அதன்மகத்துவம் இதுதான். அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், மதுரமான தேன் ஆறுகளும்
ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து
கனிவகைகளும் இருக்கும். அவர்களின் மேலான இறைவனிடமிருந்து
மன்னிப்பும் கிடைக்கும்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ளோடு பள்ளியில் அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்கள் தலையை மிகவும் தாழ்த்தியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.சிறிது நேரத்தில் எங்களை நோக்கி புன்முறுவல் பூத்தவர்களாக தலையை உயர்த்தினார்கள். அப்போது நபித்தோழர்கள் “உங்களை சிரிப்பில் ஆழ்த்திய விஷயம் எது?என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்)அவர்கள் சற்று முன்னர் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து 109 வதுஅத்தியாயமான கவ்ஸரை அல்லாஹ் இறக்கியருளியதாககூறி முழு அத்தியாயத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். பின்னர், கவ்ஸர் என்றால் என்ன என்று அறிவீர்களா?என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வும்அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றனர். அதற்குநபி (ஸல்) அவர்கள் “அது ஒரு நீரோடை, அது சுவனத்தில் அமைந்துள்ளது. அதை எனக்கு தருவதாக என் இறைவன் வாக்களித்துள்ளான்”.இதில்ஏராளமான நன்மைகள் உள்ளன. அது ஓர் நீர் தடாகம் அதை நோக்கி எனது
உம்மத்தினர்வானில் தென்படும் வின்மீன்கள் அளவுக்கு அனுப்பப்ப்டுவார்கள்என்று கூறினார்கள்.
நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம். 723
அபு ஹூரைரா அவர்கள்கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான்
உங்களுக்கு முன்பே சென்று கவ்ஸரின்
அருகே உங்களுக்கு நீர் புகட்டக்காத்திருப்பேன். அதில் ஒரு முறை குடித்தால் தாகமென்பதே ஏற்படாது”
(நூல்: திர்மிதி)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்:20-04-2017
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம்குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை)அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத்துணைவியாரையும், குழந்தையையும் விட்டுவிட்டு இருகரமேந்தி துஆ செய்துவிட்டு வந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவன மணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது. எங்கும் கானல் நீர்தான். பச்சிளங் குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள், குழந்தையின் பாதத்திலிருந்து உலகின்கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமை நாள்வரை வற்றாத ஜம் ஜம் எனும் நீரூற்றை
பேரற்புதத்தை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.உலகிலேயே புனிதம் நிறைந்தஒரு தண்ணீர் உண்டென்றால் அது ஜம் ஜம் தண்ணீர் மட்டும் தான். அதை பருகுபவர்களுக்கு மனநிம்மதியும், உடல்ஆரோக்கியமும், வலிமையும்தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதை இவ்வரலாறு உணர்த்துகிறது.
ஸபஃ சமுதயத்தினருக்கு அவர்கள் வசித்த இடத்திலேயேஒரு சான்று இருந்தது. வலப்பறமும், இடப்புறமும் (நீரோடைவழிந்தோடும்) இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள் உங்கள் இறைவன் வழங்கிய
ஆகாரத்தை!மேலும் நன்றி
செலுத்துங்கள். நாடோ நன்கு செழிப்பாக இருக்கிறது. படைத்த இறைவன் மன்னிப்பாளனாக இருக்கிறான். இரவு, பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்வாழுங்கள்.
மேற்கூறப்பட்ட இந்த இரு நிகழ்வுகளும் அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் மிக அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.
எனவே, தண்ணீர் என்பது மனித சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒர்அருட்கொடையாகும். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கோதண்ணீர் என்பது மாபெரும் அருட்கொடையாகும். ஏனெனில் தண்ணீர் பந்தம் மறுமையிலும்இறை நம்பிக்கையாளனோடு தொடர்கிறது.பல்வேறு சிறப்புகளையும், மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான மாபெரும் அருட்கொடை தான் தண்ணீர்.
மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம் சுவனத்தைப்
பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம் தண்ணீர் ஒலித் தொடும் நீரோடையையோ சுவனத்தின்முதற் பாக்கியமாக கூறுகின்றான்.
அவ்வளவு ஏன்?அல்லாஹ்வின் அரியாசணம் -அர்ஷ் கூட தண்ணீரின் மீது தான் அமைந்துள்ளதாக குர் ஆன்கூறுகின்றது.
இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டுள்ளது. அதன்மகத்துவம் இதுதான். அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், மதுரமான தேன் ஆறுகளும்
ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு அனைத்து
கனிவகைகளும் இருக்கும். அவர்களின் மேலான இறைவனிடமிருந்து
மன்னிப்பும் கிடைக்கும்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ளோடு பள்ளியில் அமர்ந்திருந்தோம். நபி(ஸல்) அவர்கள் தலையை மிகவும் தாழ்த்தியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.சிறிது நேரத்தில் எங்களை நோக்கி புன்முறுவல் பூத்தவர்களாக தலையை உயர்த்தினார்கள். அப்போது நபித்தோழர்கள் “உங்களை சிரிப்பில் ஆழ்த்திய விஷயம் எது?என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்)அவர்கள் சற்று முன்னர் என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து 109 வதுஅத்தியாயமான கவ்ஸரை அல்லாஹ் இறக்கியருளியதாககூறி முழு அத்தியாயத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். பின்னர், கவ்ஸர் என்றால் என்ன என்று அறிவீர்களா?என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வும்அவன் தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றனர். அதற்குநபி (ஸல்) அவர்கள் “அது ஒரு நீரோடை, அது சுவனத்தில் அமைந்துள்ளது. அதை எனக்கு தருவதாக என் இறைவன் வாக்களித்துள்ளான்”.இதில்ஏராளமான நன்மைகள் உள்ளன. அது ஓர் நீர் தடாகம் அதை நோக்கி எனது
உம்மத்தினர்வானில் தென்படும் வின்மீன்கள் அளவுக்கு அனுப்பப்ப்டுவார்கள்என்று கூறினார்கள்.
நூல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம். 723
அபு ஹூரைரா அவர்கள்கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “நான்
உங்களுக்கு முன்பே சென்று கவ்ஸரின்
அருகே உங்களுக்கு நீர் புகட்டக்காத்திருப்பேன். அதில் ஒரு முறை குடித்தால் தாகமென்பதே ஏற்படாது”
(நூல்: திர்மிதி)
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்:20-04-2017
No comments:
Post a Comment