திறந்திருக்கும்
தேன் பாத்திரம் முழுமையாக
ஹிஜாபை அணியாத ஒவ்வொரு பெண்ணும்.
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
அந்நிய ஆண்களிடம்
பேசும்போது அரைமுக்காடு
கால் முக்காடு போடுவது
நைட்டி மட்டும்
அணிந்துகொண்டு
வீட்டு வெளியே நடமாடுவது
பால்காரன்
காய்கறிகாரனிடம்
கேபிள்காரனிடம்
தலைத்துணி இல்லாமல்
சகஜமாக சிரித்துப்பேசுவதற்கு
முக்கியக்காரணம்
கணவர்கொடுக்கும் இடமே!!!
இத்தகைய செயல்களை
கணவர் வீட்டில் இருக்கும்போது
பார்த்தும் கண்டு கொள்ளாமல்
இருப்பது
சைத்தானுக்கு
அனுமதி கொடுப்பது
போலாகும்.
கண்டிக்கும் பொறுப்பு
வழிகாட்டும் பொறுப்பு
பாதுகாக்கும் பொறுப்பு
கணவனுக்கு உள்ளது
அவனோ அயல்நாட்டில்
இருந்தால்
வேறு வினையே வேண்டாம்.
மச்சான் கொழுந்தனிடம்
குழைந்து கிண்டல்
பண்ணி இரட்டை அர்த்தமாக
பேசுவது மார்க்கத்தில
தடுக்கப்பட்டது
மரணத்திற்கு சமமானது!
அப்படி இருக்கும்போது
காய்கறி விற்பவன்
பால்காரனிடம்
தலைத்துணியும் சரியாக
அணியாமல் மணிக்கணக்கில்
கதை பேசும்
மட்டி மனைவியர்களை
யார்தான் திருத்துவது!!!
எப்படி தொலைந்தாலும
பரவாயில்லை
சொன்னாள் கேட்க மாட்டாளே
என்ற காரணத்திற்காக
கணவன்மார்கள்
கண்மூடி இருப்பது வேதனை!!!
பெண்களின் தலைவியான பாத்திமா (ரலி) அவர்கள் தங்களை அந்நியர்களின் தீய பார்வைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதில் மிக கவனமாக நடந்து கொள்வார்கள். இரவிலும் கூட வெளியே செல்லும் போது தங்களை யாரும் அடையாளம் காண முடியாதவாறு கிழவி போன்று தோற்றத்தை கொண்டவர்களாக வெளியே சென்று வந்ததாக வரலாறு சொல்கிறது.
ஒரு பெண் வெளியில் செல்லும் போது ஃபர்தா (உடலை முழுவதும் மறைக்கும் ஆடை) அணிந்து தன் தலை மற்றும் மார்பகங்களை மறைத்துச் செல்ல வெண்டும். மேலும், ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டிற்கு ஒரு சஹாபி வந்திருந்தார். உடனே நபியவர்கள் தங்கள் மனைவியை உள்ளே செல்லுமாறு பணித்தார்கள். அதற்கு நபியவர்களின் மனைவி வந்திருப்பவர் உம்மி மக்தூம் என்னும் இரு கண்களும் தெரியாதவர் தானே? நான் ஏன் உள்ளே செல்ல வேண்டுமென்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் உங்களுக்கு பார்வை இருக்கிறதல்லவா? என்று கூறினார்கள். முஃமின்களின் தாயாகிய நபி அவர்களின் மனைவிக்கே இந்தக் கட்டளையென்றால், நீங்கள் உங்களது நிலையைச் சிந்தித்து கொள்ளுங்கள்.
சூரா அந்நூர் என்ற அத்தியாயத்தில் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு சொல்லி காட்டுகிறான்.
"மேலும் (நபியே) முஃமினான (நம்பிக்கைகொண்ட) பெண்களிடம் கூறும்; அவர்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக்கொள்ளட்டும்; தங்களது அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்;..... (சூரா அந்நூர்:31
"நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்." (அஹ்ஸாப் :59)
பதிவு நாள்: *18-02-2017*

No comments:
Post a Comment