Thursday, 4 April 2019

🧕தொடர் உதிரப்போக்குள்ளவர் தொழுவது எப்படி?

மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன❓

சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப்போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு இதுதான்.

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு, இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 228

இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு அதையே மாதவிடாயாகக் கொள்ள வேண்டும். அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று இதிலிருந்து தெரிகிறது.

குளிப்பது கட்டாயமில்லை என்றாலும் தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது (நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக்கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்த நாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.

நூல்: புகாரி 327

தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி இஃதிகாஃப் என்ற வணக்கத்தைக் கூட செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.

Www.Online.com

பதில் & மதிப்பெண் பட்டியல் மார்க்க கேள்வி எண் - 1146

🕋பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்ரஹிம்🕋

⛱⛱⛱🏖🏖🌹⛲⛲⛱⛱  ⛱

📚 குர்ஆனிலிருந்து கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் :

கேள்வி 01: எவர்கள் தம்மிடம் இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படுகின்றனர் ?

பதில் : ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்,

🌏ஆதாரம் -: 23 :53

கேள்வி 02: எப்பொழுது அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள் ?

பதில் : (இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்,

🌏 ஆதாரம் 23:64

🌴🍂🍃🌴🍂🍃🌴🍂🍃🌴🍂

📚 ஹதீஸில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி:

கேள்வி: திருக்குர்ஆனில் 111-வது சூரா எப்பொழுது இறக்கப்பட்டது ?

பதில்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் (அவர்களில் நல்லெண்ணம் படைத்த உங்கள் கூட்டத்தாரையும் எச்சரிக்கை செய்யுங்கள்)" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச்சென்று "ஸஃபா" மலைக்குன்றின் மீதேறி உரத்த குரலில் "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து) என்று உரத்த குரலில் கூறினார்கள். அப்போது (குறைஷி) மக்கள், "சப்தமிடும் இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு "முஹம்மத்" என்று (சிலர்) பதிலளித்தனர். உடனே முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி மக்கள் திரண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!" என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது, "இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டுவருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா ?" என்று கேட்டார்கள். மக்கள், "உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் (இதுவரை) அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், (என் மார்க்கத்தை நீங்கள் ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்" என்றார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப், "உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?" என்று கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறப்பட) எழுந்தார்கள். அப்போது "அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனே அழியட்டும்" எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் "கத்" (ளுóகுú) எனும் இடைச் சொல்லை இணைத்து) "வ கத் தப்ப" (அவன் அழிந்தேவிட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை,

  🌏 ஆதாரம் :- முஸ்லிம்  : 355

🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒🥑🍒

🏵முதல் குழுமத்தில் பதிலளித்த சகோதரர்கள்:

01) முஹம்மது பீர் - திருநெல்வேலி,  ❓

02) ராஜா முஹம்மது - கட்டுமாவடி , 3 (அட்மின்)

03) முஹம்மது ஹனீபா சேலம்,  3

04) A.முஹம்மது ஷாஹிது - காவக்காரன்பட்டி,  3

05) நஜ்முதீன் - கூத்தாநல்லூர்,  3

06) முஹம்மது யூசுப் ஷேட் - திருநெல்வேலி, 3

07) அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர், 3

08) முஹம்மது முஸ்தபா - சென்னை  3, (அட்மின்)

09) S. ஷம்சுல்லுஹா - மதுரை  ❓

10) அப்துல் பாஷித்  - காயல்பட்டினம்,  3

11) காதர் ஹூசேன் - மலேசியா,  3

12) சமீர் - காவக்காரன்பட்டி,  ❓

13) தாஜூதீன் - B. மேட்டூர்,  3

14) இம்ரான் - சென்னை,  3

15) முஹம்மது - மேலப்பாளையம்,  3

16) ஹமீதுதீன் - தஞ்சாவூர்,  3

17) முஹம்மது  பிலால் - வலையப்பட்டி,  3

18) முஹம்மது இர்பான் - பண்டாரவடை,   ❓

19) ரியாஜீல் ரஹ்மான் - காவக்காரன்பட்டி,  3

20) முஹம்மது ஷஃபி - வெள்ளையபுரம்  3

21) அப்துல் காதர் - திருநெல்வேலி,  3

22) முஜீப் - சென்னை,  3

23) நூர் முஹம்மது அஜீஸ்  தென்காசி,  3

24) பீர் முஹம்மது - ராஜகிரி  2

25) முஹம்மது இக்பால் - காவக்காரன்பட்டி  3

26) அப்துல் பஃத்தாஹ்  - கூத்தாநல்லூர்  ❓

27) அப்துன் நாஃபி - வலையப்பட்டி  ❓

28) அப்துல்லா - சென்னை  3

29) சலீம் ராஜா - தேவக்கோட்டை  ❓

30) உமர் - புளியங்குடி,  ❓

31) முஹம்மது ரபி - சென்னை,  ❓

 32) முஹம்மது பாஹிம் - காவக்காரன்பட்டி,  ❓

33) முஹம்மது பயாஸ் - சென்னை,  ❓

34) ஜாகீர் உசேன் - கோவை,❓ (அட்மின்)

35) யாசர் அரபாத் - காயல்பட்டினம்,❓

36)  ஹபீபுர் ரஹ்மான் - சென்னை,  ❓

37) சித்திக் - மண்பறை❓

38) ஹிதாயத்துல்லா - காவக்காரன்பட்டி,❓

 39) அன்வர்தீன் - காவக்காரன்பட்டி,❓

40) அ.முஹம்மது யூசுப் - மேலக்காவேரி,❓

41) சுல்தான் - திருநெல்வேலி,❓

42) ஹபீபுல்லாஹ் - காவக்காரன்பட்டி,❓

43) முஹம்மது தாஹா - காவக்காரன்பட்டி, 3

44) அபுதல்ஹா  - திருநெல்வேலி,❓

45) MG நிஜாமுதீன் - பு,முட்லூர்,❓(அட்மின்)

46) க.அப்துல் ஜப்பார் - முஹம்மது பந்தர்,❓

47) அப்துல் பாஸித் - கோவை,❓

48)B.முஹம்மது ஃபாதித் - தாம்பரம் -❓

49)அலாவுதீன் -கருர் ❓

🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉🏀🏉

🍇பதிலளித்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக ஆமீன்🍇

📒 பதிலளித்த சகோதரர்களின் பெயர் விடுபட்டிருந்தால் தயவு செய்து எனது தனி ஐடியில் தெரியப்படுத்தவும்.

☘☘☘☘☘☘☘☘☘☘☘

🏮🎀 ரஜப் 14 /7 /1440.வெள்ளிக்கிழமை 🎀🏮

🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄🌳🍄

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

🍂அட்மின் குழு🍂

பதிவு நாள்: 22/03/2019

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅